நம் முன்னோர்கள் உண்ணும் உணவிலும், உறங்கும் இடத்திலும் எண்ணிலடங்கா இயற்கை இரகசியங்களை உள்ளடக்கி வைத்துச்சென்றுள்ளனர். உதாரணமாக, நம் வீட்டுப் பெரியவர்கள், வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாதென்பர். புவி காந்த மண்டலத்தினால் நம் உடலிலுள்ள காந்த மண்டலத்திற்குப் பாதிப்பு ஏற்படும். நவீன மருத்தவம், வழக்கமாக வடக்கே தலை வைத்துப் படுப்பவர்களுக்கு ஹிஸ்டீரியா வரலாமென எச்சரிக்கிறது. இதை அன்றே உணர்ந்துதான் நம் முன்னோர்கள் வடக்கில் தலை வைத்துப்படுக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர்.
அதே போல், நாம் உண்ணும் உணவு உடலுடன் சேர, காலையில் கஞ்சியும், நெய்யும் கலந்து அருந்தவும், ஏகாதசி அன்று மாதம் ஒரு நாள் பட்டினி கிடக்கவும், உண்ணும் உணவை வாழை இலையில் உண்ணவும் வற்புறுத்தியுள்ளனர். இவ்வாறு ஒவ்வொன்றிலும் உட்பொதிந்த பொருளொன்று உண்டென்றால் அது மிகையன்று.
அன்று ஆன்றோர் கூறிய அறிவுரைக்கெல்லாம், இன்று பல நாட்டோர் பகுத்தறிந்து சொன்னபின்னர்தான், அர்த்தம் புரிகிறது நமக்கு. அந்த வரிசையில், கிராம்பின் மருத்துவ குணங்களை நன்கறிந்த நம் முன்னோர் அதனை நம் உணவில் நன்றாய்ச் சேர்த்து வந்துள்ளனர். கிராம்பிலுள்ள “பீனாலிக்” கூட்டுப்பொருட்கள், உணவு பாழாவதைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக அண்மையில் மிகல் ஹெர்னன்டஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
உணவுப்பொருள் ஊசிப்போக, உணவிலுள்ள கொழுப்பும், காற்றிலுள்ள பிராணவாயுவும் கலப்பதால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களே காரணம். அத்தகைய வேதியியல் மாற்றங்களால், உணவும் ஊசிப்போகும், தரமும் தாழ்ந்து போகும். அத்தகைய வேதியியல் மாற்றங்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கிராம்பிற்கு உள்ளது.
உணவுப்பொருள் பதப்படுத்தும் துறையில், இதுநாள்வரை வேதிப்பொருட்களை மட்டுமே பதனப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய வேதிப்பொருட்கள் உணவைப் பதப்படுத்துவதுடன், பக்க விளைவுகள் கொடுத்துப் பாடாய்ப்படுத்தும். இனி கிராம்பின் பக்கம் இவர்கள் கவனம் திரும்பும்.

8 comments:
Informative...
thagavalgal nalla irukku
valthukkal
நல்ல பயனுள்ள பகிர்வு
Thanks a lot for KALAANESAN, THENNAVAN&JOTHI for coming in my site and offering your valuable comments
Interesting and useful
நன்றி ராஜமாணிக்கம் சார்.
sir, I read the interest news about the cloves. Thankyou
THANK U NARAYANAN.
Post a Comment