இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 11 August, 2010

பொள்ளாச்சி பக்கம் போனேன்.


           இந்த மண்ணில் பிறந்த திரு.பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள், தம் தாய் தந்தையைப்போற்றும் வகையில், தம் சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இன்முகத்துடன் இலவச சேவை இங்கே. இதனருகில் அனைத்து வசதிகளுடன் வேதநாயகம் கலையரங்கம் ஒன்றும் கட்டியுள்ளார். பொதுச் சேவைகளுக்கு இலவசம். திருமணமென்றால், சிறிய தொகையொன்றைச் செலுத்தவேண்டும்.
           இந்த மாதம் எட்டாம் தேதி வேதநாயகம் கலையரங்கத்தில், உணவில் கலப்படம்-உயிருக்கு உலை வைத்திடும் என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கோவை, இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுriயில், எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர்  திரு.சிவகுமார் பொதிகைக்கு என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றுதான் பார்த்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழகியதுபோல், வாழ்க வளமுடன் என வாயார வாழ்த்தி வரவேற்ற பொருளாளர்  திரு.தண்டபாணி ஐயாஇன்னும் அங்கே இன்முகத்துடன் பழகிய பலரைச் சொல்ல பக்கங்கள் காணாது. நிகழ்ச்சியில், பொதிகையின் தலைவர்  இயற்கை ர்வலர் திரு.இராமகிருஷ்ணன் ஐயா என்னை அறிமுகம் செய்தார். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி  நுகர்வோர்  குழு, கற்றறிந்த பெரியோர்  எனப்பலர்  வீற்றிருந்த சபையில் எடுத்துச் சொன்னேன் எனக்குத் தெரிந்த கருத்துக்களை. கண்ணுக்குத் தெரியும் கலப்படங்களைவிட, கலர்க்கலராய் கலக்கப்படும் இரசாயனக் கலப்படங்களே இப்போததிகம் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன் தொகுத்துக் கொடுத்தேன்.
           இறுதியில் பார்வையாளர்கள், கேள்விகள் கேட்டனர்.  பார்வையாளர் மத்தியில் எழுந்த கேள்வி: "அத்தனையிலும் கலப்படம் என்று அடித்துச் சொல்லிவிட்டீர்கள். எதனை உண்பது" என்பதையும் கூறுங்களென்றனர்..
எப்படிச் சொல்வது இதற்கோர்  பதிலை? இன்றளவும் யோசிக்கின்றேன். விலை சிறிது அதிகம் கொடுத்தாலும், விளைகின்ற நிலத்தில் இயற்கை விஞ்ஞான முறைதனை பயன்படுத்தி விளைவிக்கின்ற பொருட்களே நம் உடலுக்கு நல்லது. உணவில், செயற்கை நிறமிகளைத் தவிர்ப்போம். செம்மையாய் வாழ்வோம்.

Follow FOODNELLAI on Twitter

5 comments:

NARAYANAN said...

Sir Really I am happy seeing this site

RAJAMANICKAM said...

I am proud to say that i am also one of the follower of vedhatri Maharishi who introduced the word "VAZHGA VAZHAMUDAN" AND VALGA VAIYAGAM. HIS Birth day comes on 14th August. In Chennai, Our Honoroble Chief Minister will participate on that day in chennai Nehru stadium. I am a Arulnithiar(yoga teacher)for the past 12 years.My wife, and my two sons were learned yoga. Elder son is an engineer now he is in Texas, USA. my younger son is a Doctor he completed MBBS last year. Aaliyar Arivuthirukoil is near pollachi.
Your class was very useful for POTHIGAI Members. Many more wishes to you.

உணவு உலகம் said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நாராயணன்.
மிக்க சந்தோசம் ராஜமாணிக்கம் சார்.

butterfly Surya said...

அருமையான பதிவுகள்.

தொடருங்கள்..

வாழ்த்துகள் நண்பரே.

உணவு உலகம் said...

வண்ணத்து பூச்சியின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வண்ண மயமான தங்கள் வலைபூவையும் கண்டேன், களிப்புற்றேன்.