தேயிலையில் கலப்படம், தெரிந்த பின்னர், அருந்த வரும் அச்சம். தெள்ள தெளிவாய் எடுத்துரைத்த குமுதம். வீடுகளில் அடுப்பங்கரை வரை சென்று, விபரீதங்களை தாய்குலங்களிடம் விளக்குவதால், இக்கட்டுரை தனி சிறப்பு பெற்றது. செய்திதாள்களில் வருபவை பெரும்பாலும் ஆண்களையே சென்றடைகின்றது. குமுதம் போன்ற வார இதழ்கள் தரும் செய்திகள், நம் வீட்டு எஜமானர்களையும்(!) எளிதில் சென்றடைகின்றது.
தூதுவளை மிட்டாயில், வாந்தி வருவதை தடுக்கும் மருந்துகளின் கலப்படம். எத்தனை முறை சொன்னாலும், எத்தர்கள் இன்னும் திருந்தவில்லை. ஒன்றும் அறியா பிஞ்சு குழந்தைகள் கூட, நஞ்சென்று அறியாமலே தின்று, நரம்பு கோளாறுகளால் நலிவுருகின்றனர். எனவேதான்,அத்தனை பத்திரிகைகள் வாயிலாகவும், எடுத்து சொல்கிறோம்.
ஒவ்வொரு பத்திரிக்கையும், ஒருவர் திருந்த வழி வகுத்தால், நம் அனைவருக்குமே நன்மைதான்.

5 comments:
Thanks Sankaralingam give aware more like this post
நன்றி சிவா சார். இந்த பணி என்றும் தொடரும்.
பயனுள்ள தகவல் பலரை சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள்!
சென்றடையும் என்ற நம்பிக்கைகளோடு....நன்றி
We conducted a awareness programme on PFA.Act in Self Help Group in Yercaud only. It help some extend. But yours article create awareness among ladies all over Tamil speaking world.well done! well done!
Post a Comment