இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 4 October, 2011

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி-சண்டையிலா?சேவையிலா?

                                   பதிவுலகம் போகும் பாதை சரிதானா?
        நாளொரு சண்டையும், பொழுதொரு பிரச்சனையும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. நம் பதிவுலகிலும், உள்குத்துப்பதிவு, ஆபாசப் பதிவு,ஒருவருக்கு- அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறேன் என்று சொல்லி ஓராயிரம் மெயில்கள், மாற்றுக்கருத்து பதிவு செய்தால், ஒடுக்கப்பார்ப்பது, ஒத்து வரவில்லையென்றால், வலைப்பூவை ஹாக் செய்வது
என்றிருந்த நிலைமை இன்று மாறி, பதிவர்கள் என்றாலே சமூக அக்கறை உள்ளவர்கள் என்று முத்திரை குத்திடும் காலம் மலர்ந்துள்ளது, மனதை மகிழ்வுறச் செய்கின்றது.
                       நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல்  மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.


நாட்டிற்கு நல்ல சேவைமனதோடு மட்டும் சகோதரி கௌசல்யா அவரது கணவர் ஜோதிராஜ் ஆகியோர், EAST TRUST - என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு (ENVIRONMENTAL AND SOCIAL TRANSITION TRUST) ஒன்றைத் துவக்கி, அதன் மூலம், சமூக சேவைகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.இவர்கள் அந்த அமைப்பின் மூலம், முதன்முதலில் ஒரு ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு, உடைகள் மற்றும் பாத்திரங்கள் வாங்கிப் பரிசளித்துள்ளனர்.
                  அத்துடன் நிற்கவில்லை அவர்களது சேவை. நெல்லையிலுள்ள அன்பு ஆசிரமத்தில் பயிலும் 145 மாணவ மாணவியருக்கு, அவர்தம் ஏழ்மை நிலைமையினை கருத்தில் கொண்டு, ரத்தப்பிரிவு மற்றும் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியும் முகாமினை EAST ட்ரஸ்ட் மூலம் நடத்தினர்.ஏற்கனவே, இந்த ஆசிரமம் பற்றியும், அங்கு பதிவர்கள் செய்ய உத்தேசித்துள்ள சேவைகள் குறித்தும் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


பதிவர்கள் அறிமுகம்: உண்மையில், நான் பதிவுலகில் நுழைந்த புதிதில்,என்னை, என் வலைப்பூவைப் பதிவுலக நண்பர்களுக்கு இன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1 மூலம்  அறிமுகம் செய்து வைத்தவர் இந்த சகோதரிதான்.அவரை அவ்வாறு எழுத ஊக்குவித்தவர் ஜோதிராஜ். சுவாமி(!) திவானந்தா(நெல்லை வந்த நண்பர்களுக்கு இவரைத் தெரியும்), அவருக்குத் தெரிந்த மருத்துவத்துறை நண்பர் மூலம், முகாமிற்கான தொழில்நுட்ப வசதிகளை, குறைந்த செலவில் செய்து கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம், முதல் நாள் நடந்த ’ஹேப்பி சயன்ஸ்’ கூட்டத்திற்கு, ஜப்பானிலிருந்து வந்திருந்த, அந்த அமைப்பின் இந்திய மேலாளர் மற்றும் பிரச்சாரகர் யோஷிஹிரோ மோரி, முகாமைத் துவக்கி வைக்க வருகை தந்தார். அவரை வரவைத்ததும் இளம் பதிவர் ஒருவரே. ஷாஜஹான் ஷெரிஃபை, நான் இந்தப் பதிவில் அறிமுகம் செய்துள்ளேன். ஓய்வு பெற்ற மாவட்டப் பதிவாளர் திரு. சிதம்பர பாண்டியன் முன்னிலை வகித்தார். சுழற்கழக நண்பர்களும் கலந்து கொண்டனர்.அந்த சேவை நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே.

சேவைகள் தொடரும்: சகோதரி கௌசல்யாவின் கணவர் திரு.ஜோதிராஜ் பற்றி இந்த இடத்தில் குறிப்பிட்டே தீர வேண்டும். அவரும் ஒரு பதிவரே. நேரமின்மை காரணமாக தற்போது பதிவுகள் எழுதுவதில்லை. பணம், பகட்டு, பத்து தலைமுறைக்கு சொத்து என்று அலைகின்ற மனிதர்கள் மத்தியிலே, எதை எந்த நேரத்தில் யாருக்கு செய்தால் நல்லதோ, அதை அவர்தம் இருப்பிடம் தேடிச் சென்று செய்வதில் மற்றவர்களுக்கு முன்னோடி.
இந்த தம்பதியரின் அடுத்த குறிக்கோள்: தண்ணீரின்றி மக்கள் தவிப்பதைத் தவிர்க்க, கருவேல முள் மரம் குறித்த விழிப்புணர்வு உருவாக்குதல்,  மழை நீர் சேகரிப்பை உற்சாகப்படுத்துதல், வேலையற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் புரிய வங்கிக் கடன் வசதி செய்து கொடுத்து, வாழ வழியும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்துதல், கால்கள் இழ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுரக செயற்கைக் கால்கள் பொறுத்துதல் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது இவர்களிடத்தில். அவர்தம் சமூகப்பணி தொடரத் தொடர, நானும் தொடர்கிறேன், அவர்தம் வழித்தடத்தில். முடிந்தவரை பகிர்கின்றேன் உங்களுடன். நன்றி.
Follow FOODNELLAI on Twitter

84 comments:

nellai ram said...

nice!

Unknown said...

அண்ணே பகிர்வுக்கு நன்றி...மேடத்தோட சேவை தொடர வாழ்த்துக்கள்..!

மாணவன் said...

கெளசல்யா மேம் அவர்களின் சமூகப்பணி சேவை மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்!

கவி அழகன் said...

நல்ல விடயம் வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவுலகம் இனி அர்த்தப்படும்...

ஒற்றுமையுடன் செயல்படுவோம்...

Avargal Unmaigal said...

திரு.ஜோதிராஜ் & திருமதி.கெளசல்யா அவர்களின் சமூகப்பணி சேவை மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நல்ல செய்தியை நாலு பேருக்கு பகிர்ந்து அளிக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்

கடம்பவன குயில் said...

பதிவுலக அரசியலையும், இப்படியும் சேவைசெய்யலாம் என்று சகோதரி கௌசல்யா குடும்பத்தினரின் தன்னலமற்ற சேவையினையும் குறிப்பிட்டு தற்போதைய பதிவுலகின் இரு துருவங்களையும் கோடிட்டு காட்டிய உங்கள் திறன் அபாரம். தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்.

தொலைக்காட்சிக்கு ஒரு ரேட்டிங்மாதிரி பதிவுலக ரேட்டிங்கை வைத்துக்கொண்டு அதைப்பிடித்து தொங்கிட்டு திறியறவங்களை என்ன செய்ய. அவங்களா திருந்தினால்தான் உண்டு.

settaikkaran said...

பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய ஒரு பாராட்டுக்குரிய பதிவு.

Chitra said...

Very impressive post.... Our heartfelt wishes to Mr. Jothiraj and Mrs. Kousalya. May God bless them more to continue with their social service.

இராஜராஜேஸ்வரி said...

பதிவர்கள் என்றாலே சமூக அக்கறை உள்ளவர்கள் என்று முத்திரை குத்திடும் காலம் மலர்ந்துள்ளது, மனதை மகிழ்வுறச் செய்கின்றது./

பகிர்வுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

சகோதரி கௌசல்யா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

கௌசல்யா மேமுக்கு வாழ்த்துக்கள்.. சண்டையை தவிர்த்து நல்லதை பேசுவோம், தீயன தானாய் கழியும்..

துபாய் ராஜா said...

திரு.ஜோதிராஜ்,திருமதி.கொசல்யா தம்பதியினரின் சமூக சேவைகளுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

//நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.//

பதிவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

அருமையான பகிர்விற்கு நன்றி சித்தப்பா சார்.

சௌந்தர் said...

அவர்கள் செயல் மிகவும் பாராட்ட தக்கது நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யலாம்....

அவர்களை மானதார பாராட்டுவோம் ..

பதிவுலகில் இப்படி பட்டவர்கள் இருப்பது நமக்கு சந்தோசம் தான் :))

மேலும் அவர்கள் பல செயல்கள் செய்ய வாழ்த்துவோம்...

rajamelaiyur said...

Congrats

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்லதொரு பதிவு.... அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நாய் நக்ஸ் said...

Nalla pathivu.....
Vazhthukkal......

நெல்லி. மூர்த்தி said...

பொழுதுபோக்கிற்காக, தனிமனிதச் சிந்தனைகளுக்கு வடிகாலாக என்கின்ற தளத்திலிருந்து சமூக நலனிற்காக பதிவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பிக்குரியது. மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்!

K said...

வணக்கம் சார்!கும்புடுறேனுங்கோ!

பதிவுலகின் இன்றைய நிலைபற்றி அழகாக சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

ஆனாலும் உங்கள் பதிவில் சில “ சொல்ல மறந்த கதைகளும்” உள்ளன!

அவற்றை நானே சொல்கிறேன்! ஏனென்றால் வரலாறு மிக முக்கியம் சார்!

Unknown said...

நல்ல பகிர்வு சார்..

உண்மையில் அவர்களின் சேவைக்கு தலை வணங்குவோம்..

MANO நாஞ்சில் மனோ said...

தேவையானவர்களுக்கு உகந்த நேரத்தில் சேவை செய்வதுதான் சிறந்த சேவை, இதில் ஈடுபட்டுள்ள கவுசல்யா தம்பதியினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...

MANO நாஞ்சில் மனோ said...

திவானந்தாவை சரியான உள்குத்து குத்தி விட்ட்ருக்கிறார் ஆபீசர் ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் எல்லார் சேவையும் உங்கள் நல்ல மனதுபோல் தொடரட்டும்....

Unknown said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பணியைத் தொடங்கியிருக்கும் கௌசல்யாவுக்கும் அதை எங்ககூட பகிர்ந்துக்கிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.

சக்தி கல்வி மையம் said...

மனதோடு மட்டும் சகோதரி கௌசல்யா அவரது கணவர் ஜோதிராஜ் ஆகியோர், EAST TRUST - என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு (ENVIRONMENTAL AND SOCIAL TRANSITION TRUST) ஒன்றைத் துவக்கி, அதன் மூலம், சமூக சேவைகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.//

வாழ்த்துக்கள்..

Kousalya Raj said...

அண்ணா முதலில் உங்களுக்கு என் வணக்கங்கள். சேவை புரிய பதிவுலகம் எனக்கு ஒரு உத்வேகம் கொடுத்தது என்பதே உண்மை.

முக்கியமாக உங்களின் அறிமுகத்திற்கு பின்னே இது சாத்தியமாயிற்று என்பதை மகிழ்வுடன் இங்கே தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் .

தொண்டு நிறுவனம் பற்றிய எனது நீண்ட நாள் விருப்பத்தை உங்களிடம் தெரிவித்ததும் இதனை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று திரு. சிதம்பரபாண்டியன் அவர்களிடம் எனக்கு அறிமுகம் ஏற்படுத்தி கொடுத்தீர்கள். அவரின் வழிகாட்டுதல் படியே அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. அவருக்கு என் நன்றிகள்.

அதன் பின் நாங்கள் தொடரும் அத்தனை செயல்களுக்கும் உங்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் மிகவும் குறிப்பிட தகுந்த ஒன்று அண்ணா.

உங்களின் ஒத்துழைப்பு என்றும் எனக்கு உண்டு...உங்களை போன்ற நல்ல இதயங்களின் துணை யாருக்கு கிடைத்தாலும் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம்.

திவான் ஜி அவர்களின் உதவி மிக பெரியது. அவருக்கும் என் நன்றிகள்.

இங்கே எங்களை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சசிகுமார் said...

யார் எக்கேடு கேட்டு போனா எனக்கென்ன என்றில்லாமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் உள்ளதோடு மற்றுமில்லாமல் உடனே செயல்களிலும் இறங்கிய கவுசல்யா அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

செய்தியை அனைவருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Astrologer sathishkumar Erode said...

பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்//
-;))

செல்வா said...

கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கௌசல்யா அக்கா அவர்களுக்கும் அவர்களின் சேவைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அவர்களின் சேவைகள் தொடரவும் வாழ்த்துகிறேன்!

Thangasivam said...

சகோதரி கௌசல்யா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்ல விஷயம் சகோதரி கௌசல்யா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

செங்கோவி said...

பாராட்டப்பட வேண்டிய சேவை, பதிவு.

சி.பி.செந்தில்குமார் said...

கவுசல்யா மேடத்தின் வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.. அவரைப்பாராட்டி, வாழ்த்திய ஆஃபீசர்க்கு நன்றிகள்

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

கௌசல்யா அக்கா மற்றும் அவரது கணவரின் இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாராட்டப்பட வேண்டிய சேவைப்பணி. தொண்டுள்ளம் படைத்த திரு.ஜோதிராஜ்- கவுசல்யா தம்பதியினருக்கு இந்தப் பணி தங்குதடையில்லாமல் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப்பதிவிற்கும் 2 மைனஸ் ஓட்டு?

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...
This comment has been removed by the author.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

மாற்றுக்கருத்து பதிவு செய்தால், ஒடுக்கப்பார்ப்பது, ஒத்து வரவில்லையென்றால், வலைப்பூவை ஹாக் செய்வது//

இம்புட்டு மேட்டரும் பதிவுலகில நடக்குதா? நம்பவே முடியல சார். யார் சார் பண்ணுறாங்க. வலைப்பூவைக் கூட ஹாக் செய்றாங்களா. என்ன சார் யார் காதில பூச் சுத்துறீங்க?

ஜீமேல் அக்கவுண்டைத் தானே ஹாக் செய்ய முடியாதுன்னு சொல்லுறாங்க. இப்படி வேற நடக்குதா.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.//

சார், உங்க கிட்ட ஒரு கேள்வி சார்.
உணவில கலப்படமிருக்குன்னு கண்காணிக்கிற நீங்க போயி அநியாயத்திற்கு துணை போகலாமா?

சார் இம்புட்டு நாளா ஒரு பதிவர் தமிழ்மணத்தில தான் தான் நம்பர் ஒன் என்று காப்பி பேஸ்ட் பதிவெல்லாம் போட்டு நின்றாரே! அவரு தில் இருந்தா விலகி, தனக்கு மொத இடம் வேணாம் புதியவர்கள் நல்லா எழுதுவறவங்களுக்கு மொத இடம் போகனும். நாம் இம்புட்டு காலமா இந்த நம்பர் ஒன்னை தக்க வைச்சது போதும் என்று விலகி இருக்கலாமில்லே.

ஏன் சார் அவரு பண்ணல? நீங்க வேற ஆவருக்கு ஆதரவா ஒரு பதிவு. இந்த பொழப்பு தேவையா.

ஏன் சார் தமிழ்மண ரேங் வேணான்னு செங்கோவி சார், நிரூபன் சார் விட்டு கொடுத்த மாதிரு இவரும் பண்ணியிருக்கலாமில்லே. இதை ஏன் சார் அவங்க பண்ணல?

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.//

அட போங்க சார், பதிவுலகில என்ன நடக்குன்னு தெரியாம நீங்க அவர் சொல்றாருன்னு எழுதியிருக்கிறீங்க. சொந்தமா கருத்து இருந்தா, தில் இருந்தா ஒவ்வோர் நாளும் வெரைட்டியா எழுதி தமிழ் மணத்தில நம்பர் ஒன்னை இவரு தக்க வைச்சிருக்கலாமில்லே.
ஏன் சார் ஒரு நாளைக்கு 15 டுவிட்சும், ரெண்டு காப்பி பேஸ்ட் பதிவும் போட்டு இந்த மாதிரி ஆளுங்க நம்பர் ஒன்னை தக்க வைக்க நினைக்கிறாங்க. நீங்க எல்லாம் இதுக்கு துணை போறீங்க சார்?

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.//

இம்புட்டுப் பேசுறீங்களே, இந்த காப்பி பேஸ்ட் நம்பர் ஒன் ஆளிடம் தில் இருந்தா தமிழ்மணத்திற்கு லெட்டர் எழுதி ஏன் சார் என் பதிவினை நீக்கினீங்க என்று கேட்க வேண்டியது தானே? அத வுட்டிட்டு அனுதாபப் பதிவு போட்டு ஊரைக் கூப்பிடுறீங்க.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

என்ன சார் பயங்கரமா காமெடி எல்லாம் பண்றீங்க, உணவில கலப்படமிருந்தா தான் கண்டுபுடிப்பீங்களா?
பதிவில கலப்படமிருந்தா எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா?

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

ஆனந்த விகடனை காப்பியடிச்சு தினமும் ஆன்மீக பதிவும், அரசியல் பதிவு எழுதி மத்தவங்க பொழைப்பில மண் அள்ளிப் போட்டு நம்பர் ஒன் என்று ப்ளாக்கில வைச்சிருக்கிற ட்ரேங் தேவையா சார்?
தில் இருந்தா சொந்தமா ஒரு நாளைக்கு அரசியல் பத்தியோ, இல்லேன்னா பொது விடயம் பத்தியோ எழுதச் சொல்லுங்க பார்க்கலாம்?
ஏன் சென்னி மலையில உள்ள கோயிலை ப்த்தி சொந்தமா யோசித்து எழுதச் சொல்லுங்க. அத வுட்டு சவுண்டு குடுக்கிறீங்க.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்./

யாரும் இங்க விரும்பி முன்னுக்கு வர்றதா தெரியலை சார். என்னமோ போங்க சார், நீங்க எல்லாம் அனுதாபப் பதிவு போடுறீங்களே.

இம்புட்டு காலமா தமிழ்மணத்தில நம்பர் ஒன்னா இருந்தவரு நல்ல மனசிருந்தா நாலு புதிய பதிவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து ஒதுங்கியிருக்கலாமே? சுயமா யோசித்து நாலு நல்ல படைப்பு எழுதியிருக்கலாமே, ஏன் சார் காப்பி பண்ணி எழுதி மத்தவங்க பொழைப்பில மண் அள்ளி போடனும்?

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.//

போங்க சார். ரொம்ப தான் லொள்ளு பண்றீங்க, உங்க கூட்டாளியா அவரு,. அதுக்காக அவரு ஒரு கடை வெச்சிட்டுருந்து உணவில கலப்படம் பண்ணினா அவர் செஞ்சது எலலாம் சரின்னு ஒத்துக்குவீங்களா சார்?
அப்படீன்னா நீங்க என்ன சார் கடமை உணர்ச்சியுள்ள அலுவலகரா? இல்லை விலை போகு மனிதரா சார்?
என்னமோ போங்க சார் உங்க காமெடிக்கு அளவேயில்ல.

திரட்டிகள் நீக்குறாங்க என்றா தில் இருந்தா அவர் தரப்பில நியாயம் இருந்தா திரட்டிகளிடம் லெட்டர் எழுதிக் கேட்டுக்க வேண்டியது தானே?

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

http://blog.thamizmanam.com/archives/351

சார் இந்த இணைப்பில பாருங்க சார், தமிழ்மணமே தீர்மானம் எடுத்திருக்காங்க. யாருமே சொல்லித் தான் அவங்க இப்படியெல்லாம் பண்ணனும் என்றில்ல.

வெட்டி ஒட்டும் பதிவுகள், சாதி/மத/சோதிட/அரசியற் கொள்கை பரப்புப்பதிவுகள், தனிமனிதத்தாக்குதற்பதிவுகள் போன்றவற்றை எக்காரணத்தினாலும் தமிழ்மணம் ஆதரிக்காது. இவற்றை உணர்ந்து பதிவர்கள் தாமே தக்க பதிவுகளைமட்டும் தமிழ்மணத்திலே இணைத்தால் இவற்றைக் கண்காணிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ தமிழ்மணத்துக்கு அவசியமில்லை. அதே சமயம் தனியாட்கருத்துச் சுதந்திரத்திலே தலையிடவோ தடையிடவோ தமிழ்மணத்துக்கு விருப்பமும் உரிமையுமில்லை. சமூகத்தின் பல திசைகளிலிருந்தும் கருத்துக்களும் குரல்களும் ஒடுக்கப்படாமல் ஒலிக்கத் தமிழ்மணம் தளத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் செயற்பாடுகளுக்கான ஒரே உந்துதல்.//

அட இதையும் தமிழ்மணம் தான் சொல்லுறாங்கோ.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

கடம்பவன குயில் said...
பதிவுலக அரசியலையும், இப்படியும் சேவைசெய்யலாம் என்று சகோதரி கௌசல்யா குடும்பத்தினரின் தன்னலமற்ற சேவையினையும் குறிப்பிட்டு தற்போதைய பதிவுலகின் இரு துருவங்களையும் கோடிட்டு காட்டிய உங்கள் திறன் அபாரம். தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்.
தொலைக்காட்சிக்கு ஒரு ரேட்டிங்மாதிரி பதிவுலக ரேட்டிங்கை வைத்துக்கொண்டு அதைப்பிடித்து தொங்கிட்டு திறியறவங்களை என்ன செய்ய. அவங்களா திருந்தினால்தான் உண்டு.//


அட என்னம்மா பேசுறீங்க பாருங்க.

நீங்க தானே செங்கோவிசாரின் ப்ளாக்கில இப்படியும் கமெண்ட் போட்டீங்க,
//
கடம்பவன குயில் said... [Reply]
// அய்யய்யோ..யாரும் வர மாட்டேங்கிறாங்களே..கமர்சியல் பதிவர்கள் என் பொழப்பை கெடுக்கிறாங்களே ‘ என்று கூவுவதை விடுங்கள்.//

அதல்லாம் ஏன் நீங்க சொல்றீங்க.... என்னை யாரும் கேள்வி கேட்டகத்தான் விமர்சிக்கத்தான் உரிமையில்லை. நான் யாரையும் கேள்வி கேட்கமுடியும் யாரையும் விமர்சிக்வும் முடியும். அது என்வீட்டு நியாயம். அப்படித்தான் கேட்பேன். நீங்க கில்மா பதிவு, சினிமா பதிவு, ஞாயிறென்றால் ஆன்மீக பதிவு, சமையல் ரெசிபி பத்தாததுக்கு டுவிடடுவீங்க...வாசகர்கள் எல்லோரையும் உங்க பக்கமே நகரவிடாமல் இழுத்து வச்சுக்கிட்டா என்னோட வெட்டி அரட்டைய யார் வந்து பார்க்கிறது??? அப்புறமா நாங்க கேள்வி கேட்க மாட்டோமா??? இது உங்களுக்கே நியாயமா???
August 30, 2011 8:40 AM
//

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

கடம்பவன குயில் மேடம், ஒங்களை புரிஞ்சுக்கவே முடியலையே..

//கடம்பவன குயில் said... [Reply]
// அய்யய்யோ..யாரும் வர மாட்டேங்கிறாங்களே..கமர்சியல் பதிவர்கள் என் பொழப்பை கெடுக்கிறாங்களே ‘ என்று கூவுவதை விடுங்கள்.//

அதல்லாம் ஏன் நீங்க சொல்றீங்க.... என்னை யாரும் கேள்வி கேட்டகத்தான் விமர்சிக்கத்தான் உரிமையில்லை. நான் யாரையும் கேள்வி கேட்கமுடியும் யாரையும் விமர்சிக்வும் முடியும். அது என்வீட்டு நியாயம். அப்படித்தான் கேட்பேன். நீங்க கில்மா பதிவு, சினிமா பதிவு, ஞாயிறென்றால் ஆன்மீக பதிவு, சமையல் ரெசிபி பத்தாததுக்கு டுவிடடுவீங்க...வாசகர்கள் எல்லோரையும் உங்க பக்கமே நகரவிடாமல் இழுத்து வச்சுக்கிட்டா என்னோட வெட்டி அரட்டைய யார் வந்து பார்க்கிறது??? அப்புறமா நாங்க கேள்வி கேட்க மாட்டோமா??? இது உங்களுக்கே நியாயமா???
August 30, 2011 8:40 AM
//

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

இம்புட்டு கேள்விக்கு பதில் சொல்லுங்க சார்.
காப்பி பேஸ் தவறில்லை காப்பி பேஸ்ட் காரங்க எப்பவுமே முன்னுக்கு இருக்கலாம் என்று நீங்க சொன்னா, காப்பிரேட் கடைகளை பத்தி நீங்க இனிமே பேசவே கூடாது சார்.

K said...

சிவாஜி கணேஷன் ஸ்டைலில் படிக்கவும்!

“ தேர்தல்ல கள்ள ஓட்டுப் போட்டு ஒரு கட்சி ஜெயிச்சா, மத்தக் கட்சிகள் எல்லாம் எலெக்‌ஷன் கமிஷன் கிட்ட கம்ப்ளைன் பணணும்!

அந்த எலெக்‌ஷன் கமிஷனே, கள்ள ஓட்டுக்கு சப்போர்ட் செஞ்சா, அவங்க எல்லாம் யார்கிட்ட போவாங்க!’

K said...

ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்காதீங்க சார்!

உங்கமேல பெரிய மரியாதை வச்சிருந்தேன்.............. இப்பதிவை படிக்கும் வரை!

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

என்னமோ தெரியல சார், உலகில அநியாயத்தை எதிர்க்கிறதா வேசம் போடுற எல்லோரையும் இலகுவில இனிமே நம்ப முடியாது போல இருக்கே சார்?

K said...

பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்./////////////

பின்ன, சொந்த சரக்கே இல்லாம ஆன்மீகம் டூ அரசியல் வரை காப்பி பேஸ்ட் பண்ணி, வெட்கமில்லாம, திரட்டிகளில் இணைச்சு, அதிகம் ஹிஸ்களை அள்ளி நானும் ஒரு பதிவர் தானுங்கோ என்று வலம் வருபவர்களை, என்ன, மேடை போட்டு, பாராட்டு விழா நடத்தச் சொல்றீங்களா?

K said...

உங்கள் அனைவருக்கும் ஒரு பகிரங்க சவால்! அடுத்து வரும் 25 நாட்களுக்கு, ஆன்மீகம் டூ அரசியல் வரை பல வகைப்பட்ட சொந்தப் பதிவுகள் போட்டு, திறமையை நிரூபிக்கச் சொல்லுங்க!

நாங்களே, ஆயிரம் பேரிடம் கையெழுத்துவாங்கி, தமிழ்மணத்தோடு பேசி, தடையை நீக்கிவிடுறோம்!

முடியுமா உங்களால்?

K said...

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி-சண்டையிலா?சேவையிலா? /////////

நிச்சயமாக சேவையில்தான்! ஆனால் வெட்டி ஒட்டும் சேவையில் அல்ல!

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

சார், இதையெல்லாம் விடுவம், ஒரு உதாரணத்திற்கு நம்ம ஈரோடு மாவட்டத்தை எடுத்துக்குவோம், அங்கே எம்புட்டு தகவல்கள் இருக்கு, எத்தனை அழகான விவசாய நிலங்கள் இருக்கு,. அங்க உள்ள மக்கள் பிரச்சினையை கூடவா எழுத தெனாவெட்டில்லாம காப்பி பண்ணி விகடனை நம்பி பொழைப்பை நடத்தனும்?

சீ...தூ மானங்கெட்ட பொழைப்பு சார்.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் said...

சார், அப்புறம் விகடனல ஒர்க் பண்ற நம்ம கூட்டாளி ஒருத்தன் சொன்னான்,
விகடனில ஒர்க் பண்ற ஆளுங்களே நீங்க இங்கே துதிபாடுற ஆளோட ப்ளாக்கை ஓப்பின் பண்ணி நம்ம புக்கை வைச்சு இப்படி நாறடிக்கிறானே பாவி பயல் என்று கேலியாச் சிரிப்பாங்களாம் சார்.

இது தேவையா? தேவையா?

ஏன் சார் பதிவெழுத வர்றம்? நம்ம மன திருப்திக்கு தானே, அப்புறமா ஏன் சார் இவனுங்க மாதிரி ஆளுங்க காப்பி பேஸ்ட் பண்ணி பொழைக்கனும்?

NaSo said...

பாராட்டுகளும் வாழ்த்துகளும் கவுசல்யா மேடம் தம்பதியர்க்கு!

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் ஆப்பிசர்,

நலமா?

பதிவர்களின் சமூக சேவை நோக்கிய செயற் திட்டங்களிற்கு அடியேனின் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிரூபன் said...

நான்தான், நானேதான் திரட்டிகளில் முதலிடம், நான் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டேன் என்று மார் தட்டுதல் மலையேறி, பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்.//

ஹே...ஹே...

நான் பதிவெழுத வந்து மூனாவது மாசமே என் பதிவில் தனிமனித தாக்குதல் இருக்கு என்று ரிப்போர் செஞ்சாங்க. அப்போ எனக்கு தமிழ் மண ட்ரெங் ஏழு தான் வந்திச்சு.

என் மனச் சுமையினைக் குறைக்கவும், என்னைச் சுற்றியுள்ள மக்களின் நிலமையினை எழுதத் தான் ப்ளாக் தொடங்கினேன், அப்புறமாத் தான் மேட்டர் தமிழ்மண ட்ரேங் சம்பந்தப்பட்டது என்று புரிஞ்சு கிட்டேன்.

அப்புறமா எனக்கு தமிழ் மண ட்ரேங் இல்ல பாஸ்...

நான் இப்போ ஹேப்பியா இருக்கலை..

ஹா...ஹா...என்னமோ தெரியலை பாஸ்...

மனத் திருப்திக்காக எழுத வந்திட்டு இப்படியெல்லாம் மோதிக்கிறாங்களே.

ஒன்னுமே புரியலை பாஸ்.

உணவு உலகம் said...

மன்னிக்கவும் நண்பர்களே, நான் ” பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்”
என்று சொன்னது, சில பதிவர்கள், பதிவுகள் பலரையும் சென்றடைய சேவை செய்யும், தமிழ்மணம் போன்ற ஓட்டு பட்டைகளை தில்லாக ஒதுக்கிவைத்ததைதான் குறிப்பிட்டுள்ளேனே தவிர, நீங்கள் நினைப்பது போல், காப்பி & பேஸ்ட் எழுதியவர்களை புகார் செய்து தமிழ்மணத்தில் நீக்கியவர்களை அல்ல. மேலும் தங்களைப் போன்ற நண்பர்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கத்திலோ, தனிப்பட்ட நபரை துதிபாடும் நோக்கத்திலோ அவ்வாறு நான் குறிப்பிடவில்லை.

கோகுல் said...

east trust-இன் பயணம் தொடர வாழ்த்துக்கள்!நடத்தும் கௌசல்யா அவர்களுக்கும் ஜோதிராஜ் அவர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்!

நிரூபன் said...

கௌசல்யா அக்காச்சி நல்லதோர் செயற் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறா.
அவருக்கும் இச் சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

K said...

மன்னிக்கவும் நண்பர்களே, நான் ” பல திரட்டிகளிலிருந்தும் பதிவை விலக்கியே வைத்திடும் திறமைசாலி(!)களும் பதிவுலகில் வலம் வரத்துவ்ங்கியுள்ளனர்”
என்று சொன்னது, சில பதிவர்கள், பதிவுகள் பலரையும் சென்றடைய சேவை செய்யும், தமிழ்மணம் போன்ற ஓட்டு பட்டைகளை தில்லாக ஒதுக்கிவைத்ததைதான் குறிப்பிட்டுள்ளேனே தவிர, நீங்கள் நினைப்பது போல், காப்பி & பேஸ்ட் எழுதியவர்களை புகார் செய்து தமிழ்மணத்தில் நீக்கியவர்களை அல்ல. மேலும் தங்களைப் போன்ற நண்பர்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கத்திலோ, தனிப்பட்ட நபரை துதிபாடும் நோக்கத்திலோ அவ்வாறு நான் குறிப்பிடவில்லை.//////////////

அதானே சார்! நீங்க சாதாரணமா நேர்மை தவறமாட்டீங்க! காலைல இந்தப் பதிவ படிச்சதில இருந்து ஒரே கன்ஃபியூஷன்! சார் இப்புடி பண்ணிட்டாரே என்று வருந்தினோம்!

இப்ப ஓகே! எல்லாம் கிளியராச்சு! நாங்களும் ஏதும் தப்பா சொல்லியிருந்தா ஸாரி ஸார்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கௌசல்யா, ஜோதி ராஜ், சங்கரலிங்கம் போன்றோரை அறிமுகப் படுத்திக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
அந்தப் பொண்ணு கௌசல்யா பெரிய அளவில் சாதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உணவு உலகம் said...

தவறு செய்தால் தட்டிக் கேட்கும் பழக்கம் நல்லதுதான் நண்பர்களே. நான் ஒருதலை பட்சமாக அதை எழுதியிருந்தாலோ, சுட்டிக்காட்டுதலை தவறாக எடுத்துக்கொண்டாலோ விளக்கம் அளிக்கத் தயங்கியிருப்பேன்.
நீதிமன்ற பணி. உடனே பதிவுலகம் வர இயலவில்லை.பரவாயில்லை. சில நட்புகள், புரிதலில் இன்னும் இறுக்கமாகும்.நன்றி.

கரிச்சட்டி மண்டையன் said...

/////// பதிவுலகம் போகும் பாதை சரிதானா?
நாளொரு சண்டையும், பொழுதொரு பிரச்சனையும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. நம் பதிவுலகிலும், உள்குத்துப்பதிவு, ஆபாசப் பதிவு,ஒருவருக்கு- அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறேன் என்று சொல்லி ஓராயிரம் மெயில்கள், மாற்றுக்கருத்து பதிவு செய்தால், ஒடுக்கப்பார்ப்பது, ஒத்து வரவில்லையென்றால், வலைப்பூவை ஹாக் செய்வது ///////

விடுங்க சார் ...,இவங்க எல்லாம் மதிச்சி ..,ஒரு பராக்ராப் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ..,நல்ல விஷயங்கள எழுதுறீங்க ..,இவங்கள எல்லாம் சட்ட பண்ணாதீங்க ..,அரைவேக்காட்டு பதிவர்கள் .

கரிச்சட்டி மண்டையன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு ,,இது மாதிரி பதிவர்கள் இருக்கும் போது ..,பாராட்டுக்கள் கௌசல்யா மேடம் .,

கரிச்சட்டி மண்டையன் said...

///// புதிய புரட்சிக்காரன் said...

இம்புட்டு மேட்டரும் பதிவுலகில நடக்குதா? நம்பவே முடியல சார். யார் சார் பண்ணுறாங்க. வலைப்பூவைக் கூட ஹாக் செய்றாங்களா. என்ன சார் யார் காதில பூச் சுத்துறீங்க?

ஜீமேல் அக்கவுண்டைத் தானே ஹாக் செய்ய முடியாதுன்னு சொல்லுறாங்க. இப்படி வேற நடக்குதா. /////

புர்ச்சி காரன் ..,செம்ம எங்கேயிருந்துயா இது மாதிரி அறிவாளி தனமா கேக்க முடியுது ..,ஓ ..நீ தாஸ் காபிடல் மூணுத்தி நாப்பதாம் பக்கத்துல ..,இருக்கு பாரு ..,அத படிச்சிட்டு சொல்ற போல

கரிச்சட்டி மண்டையன் said...
This comment has been removed by the author.
கரிச்சட்டி மண்டையன் said...

/////// சொந்தமா கருத்து இருந்தா, தில் இருந்தா ஒவ்வோர் நாளும் வெரைட்டியா எழுதி தமிழ் மணத்தில நம்பர் ஒன்னை இவரு தக்க வைச்சிருக்கலாமில்லே. ///////

ஆமா இவரு பெரிய அமர்தியா சென்னு .,அப்படியே உலக பொருளாதரத்த தூக்கி நிறுத்திட்டு தான் பல்லு விளக்க போவாரு ..,( தக்காளி எவன்யா இந்த தமிழ்மணம் நடத்துறான் அவன முதல்ல உதைக்கணும் )

கரிச்சட்டி மண்டையன் said...

/////மன்னிக்கவும் நண்பர்களே, /////

ஆபிசர் ..,எதுக்கு இவனுங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு ..,நீங்க நல்ல நோக்கத்துக்கு எழுதுறீங்க ..,இவனுங்க நமீதா ,பிரபல பதிவர் தற்கொலை அது இதுன்னு டைட்டில் வச்சி பதிவ எழுதுவானுங்க .,ஹிட்ஸ்காகா பதிவு எழுதுற ஆளுக கிட்ட எல்லாம் மன்னிப்பு சோ சேட் ..,ஆபிசர்..,இவங்க எல்லாம் ஹிட்ஸ் வாங்கி செரைக்கறது ப்ளேட் வாங்குற ஆசாமிக ..,அதுனால விட்ருங்க ..,

கரிச்சட்டி மண்டையன் said...

Delete Comment From: உணவுஉலகம்


கரிச்சட்டி மண்டையன்said...
/////// சார் தமிழ்மண ரேங் வேணான்னு செங்கோவி சார், நிரூபன் சார் விட்டு கொடுத்த மாதிரு இவரும் பண்ணியிருக்கலாமில்லே. இதை ஏன் சார் அவங்க பண்ணல? //////

ஆமா பெரிய ஸ்டேட் பர்ஸ்ட் ராங்க விட்டு கொடுத்துட்டாங்க ..,தமிழ்மண ராக் வாகிட்டு தான் சோத்துல உப்பு போடுவீங்களோ ...,வேணாம் புர்ச்சிகாரா ..,ஆபிசர் ப்ளாக் ன்னு பாக்குறேன் ..,நீ நம்ம கிரௌண்ட் பக்கம் வா ...,அங்க வந்து உன்னோடா வியாக்கானதா சொல்லு ,, நான் உன்னிய கொளுத்தி கொளுத்தி விளையாடுறேன் :)

கரிச்சட்டி மண்டையன் said...

உணவு உலகத்தில் வெளியிடப்பட்ட இந்த பதிவின் பின்னூட்ட பகுதி பவுடர் ஸ்டார் , புர்ச்சி காரன் ஆகிய இருவரையும் போட்டு தள்ள ஆபிசரின் உத்தரவிற்காக கையகபடுத்த காத்துகொண்டு இருக்கிறது .மேலும் உத்தரவு கிடைக்க வில்லை என்றாலும் அவர்கள் எங்கு கமெண்ட் இடுகிறார்களோ அங்கு சென்று தமிழ்மண முதல் ரேன்க் பட்டதை இந்த கரிச்சட்டி மண்டையன் தந்து ஓட ஓட அங்கேயே வைத்து அடித்து விடபடுவார்கள் என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

கரிச்சட்டி மண்டையன் said...

இந்த பதிவுக்கு இவ்ளோ மைனஸ் வோட்டா !!!!! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் ..,இவனுங்கள போட்டே ஆகணும் ஆபிசர் ..,ப்ளீஸ் கிராண்ட் மீ தி பர்மிஷன் :))

கரிச்சட்டி மண்டையன் said...

////// Powder Star - Dr. ஐடியாமணி said...
ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்காதீங்க சார்!

உங்கமேல பெரிய மரியாதை வச்சிருந்தேன்.............. இப்பதிவை படிக்கும் வரை! ////////

ஆமா இவரு பெரிய கவர்னரு .இவரு மரியாதையா வச்சி தான் பொங்கி தின்ன போறோம் ..,
வேணாம் ஓடி போய்டு ஐடியா மணி சார் .., ஓடி போற புலிய குறுக்கால மறிச்சி வம்பு பண்றவன்..,இனி இந்த பக்கம் பார்த்தேன் அவ்ளோ தான் சொல்லிட்டேன் .,

உணவு உலகம் said...

மாற்றுக்கருத்து கூறுவதையும் ஸ்போர்டிவாக எடுத்துக்கொள்வதே சிறப்பு.தவறான புரிதல்தான் இங்கு ஏற்பட்டுள்ளது.அது சரியாகி விட்டது.நாம் அனைவரும் நண்பர்கள். நண்பர்களுக்குள் சண்டை வேண்டாமென்பதே பதிவின் நோக்கமும்.ஆனால், இந்த பதிவே பிரச்சனை ஆனதால் வருத்தம் தெரிவித்தேன். இத்துடன் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். சந்தோஷமாக அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி நண்பர்களே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சகோதரி கௌசல்யா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

பாராட்டுக்குரியவர்கள்.வாழ்த்துகள்.

Prabu Krishna said...

ஒரு நல்ல பதிவர், சமூக சேவகரை அறிமுகப்படுத்திய பதிவில் ஏன் இத்தனை கலவரம்?

அக்காவுக்கு வாழ்த்துகள். உங்கள் சேவையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா.

எல் கே said...

இந்தப் பதிவில் சங்கரலிங்கம் சார் சொல்ல வந்த விஷயம்,திருமதி கௌசல்யா மற்றும் அவரது கணவரின் சேவையை பற்றி.

ஆனால் நாம் அதை தவிர்த்து மற்றவற்றை விவாதிக்கிறோம்.