இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 2 August, 2013

நெல்லை, மதுரை வட்டாரப் பதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


                                  

வணக்கம் வலையுலக நட்புக்களே,
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


சந்திப்பு நடைபெறும் இடம்:

சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்தமான கட்டிடம்.

மதுரை, நெல்லை(கன்னியாகுமரி,தூத்துக்குடி)யை சுற்றியுள்ள பதிவர்கள் இந்த பதிவர் விழாவில் கலந்து கொள்ள ஆர்வமிருப்போர் திரு.தமிழ்வாசி பிரகாஷைத்  தொடர்பு கொண்டு, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் நாளே சென்னை வருபவர்கள், அந்த தகவல்களையும் சேர்த்து சொல்லுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு  தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.





திரு.தமிழ்வாசி பிரகாஷ்
 மின்னஞ்சல்: thaiprakash1@gmail.com

அலைபேசி: 9080780981

தீதும் நன்றும் பிறர் தர வாரா வலைபதிவர் ரமணி ஐயாவிடமும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.
மின்னஞ்சல்: svramani08@gmail.com

அலைபேசி
: 9344109558

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:
1. வலைப்பூ பெயர், முகவரி ( blog name & blog url address)
2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,
3. தொலைபேசி எண்,
4. ஊர் பெயர்,
5. முதல் நாள் வருகையா என்ற விபரம்.

நண்பர்களே, விரைந்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 
பதிவர் விழா பற்றிய விபரங்கள்அடங்கிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப்படும். 
விழா குழு பற்றிய விபரங்கள் இங்கே

பதிவர் சந்திப்பு எப்படி இருக்கும்?
சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி 
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் வெளியீடு:
கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். 



              அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.

(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)
வருகைப் பதிவு:
கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும். 
தமிழ்வாசி பிரகாஷ்: thaiprakash1@gmail.com                 ரமணி ஐயா: svramani08@gmail.com
நன்கொடை:
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.. பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:
ஜோதிஜி திருப்பூர் 
கவிதைவீதி செளந்தர்
சரவணன்(ஸ்கூல் பையன்)
ரூபக்ராம்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கேபிள் சங்கர்
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
தனபாலன் - திண்டுக்கல்
வீடு சுரேஷ்
சசிமோகன்
இரவுவானம் சுரேஷ்
நாய் நக்ஸ் நக்கீரன்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
நிகழ்காலம் எழில்
கலாகுமரன்
கோவை ஆவி
உலகசினிமா பாஸ்கரன்
சுட்டிமலர்
கோவை கமல்
கோவை சதிஸ்
வெண்பா சுஜாதா
கோவை நேரம் ஜீவா
கோவை சக்தி
இப்படிக்கு இளங்கோ
ஒட்டக்கூத்தன்
வா.மு.முரளி
ஒட்டக்கூத்தன்
கோவை கோவி
சாமக்கோடங்கி பிரகாஷ்
கோவை ராமநாதன்
சதீஸ் சங்கவி
சிபி செந்தில்குமார்
வீரகுமார்
குருவை மாதேஸ்
குணா
சேலம் தேவா
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கிராமத்துக் காக்கை
விஜயன் துரைராஜ் கடற்கரை
கருத்து கந்தசாமி 
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
முகமது சபி சக்கரக்கட்டி
அ.சிவசங்கர்
தங்கம் பழனி
முனைவர் இரா.குணசீலன்
சைதை அஜீஸ்
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
முரளிக்கண்ணன் மதுரை
பெருங்குளம் ராமகிருஷ்ணன் 
சசிகலா திருவண்ணாமலை
ஜீவன் சுப்பு, 
சிவகாசிகாரன் ராம் குமார், 
சதீஸ் செல்லதுரை
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
சுப்புரத்தினம் 
ராகவாச்சாரி
ரேகா ராகவன் 
ஆதிமனிதன்
சமீரா 
நம்பி
வழிப்போக்கன் ராஜேஷ்
பழனி கந்தசாமி(மன அலைகள்) 
புலவர் இராமானுஜம்
சென்னை பித்தன்
கவிஞர் மதுமதி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்) 
மோகன்குமார்(வீடு திரும்பல்)
கவியாழி கண்ணதாசன்
பட்டிகாட்டான் ஜெய்
டி.என்.முரளிதரன் 
கே.ஆர்.பி.செந்தில்
ஆரூர் மூனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
அரசன் ( கரைசேரா அலை)
சீனு (திடங்கொண்டுபோராடு)
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்(மெட்ராஸ்பவன்) 
மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)
Follow FOODNELLAI on Twitter

10 comments:

Anonymous said...

சார் அருமை. தங்களின் பணி அளப்பரியது. தங்களின் வருகைக்கு அரங்கமே காத்திருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும் வாழ்க பதிவுலகம்....!

Yaathoramani.blogspot.com said...

பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சென்னையில் தங்களைச் சந்திப்பதில்
அனைவரும் ஆர்வமாய் உள்ளோம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவசியமான பகிர்வு...

தங்களை காண ஆர்வமுடன் உள்ளேன்.

கோவை நேரம் said...

ஆபிசர்,,,,நீங்க வருவீங்க தானே...?

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் நேரில் உரையாடுவோம்...

நாய் நக்ஸ் said...

நன்றி ஐயா...!!!

'பரிவை' சே.குமார் said...

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

விழா சிறப்படைய யாவருக்கும் வாழ்த்துக்கள்....!

ஆபீசர்.......உங்ககிட்டே பிச்சுவா கத்தி குத்து வாங்கிட்டு ஒருத்தன் சத்தமில்லாமல் ஓடுறான் இந்த பதிவர் சந்திப்பில்...வாங்க என் தளத்திற்கு.

MANO நாஞ்சில் மனோ said...

கன்னியாகுமரி மாவட்டத்தையும் பிராக்கட்டில் சேர்த்தமைக்கு நன்றி ஆபீசர்....!