கூகுள்நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு வரும்மேமாதம் 2ம்தேதி, சனிக்கிழமை டெல்லியில் நடைபெறஉள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 5 உலகசாதனைகள் படைத்த, பாளையங்கோட்டை IIPEலட்சுமிராமன்மெட்ரிக் பள்ளியின் 9ம்வகுப்புமாணவி
K.விசாலினி (வயது 14), சிறப்புரைஆற்றஉள்ளார்.
இவர் கணினிதுறையில், CloudComputing in Google Apps for Education என்ற தலைப்பில், காலை10.30மணி-11.30 மணிவரை ஒருமணிநேரம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டு
உள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் விசாலினியைத் தவிர ஜப்பான் சாகாபல்கலைக்கழகப்பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (AndrewMeyerhoff) மற்றும்
பிட்ஸ்பிலானி
(BITS Pilani) பல்கலைக்கழககணினி துறைத்தலைவர் Dr.ராகுல்பானர்ஜி ஆகியோரும்உரையாற்றஉள்ளனர்.
கூகுள்நிறுவத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளி மாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல் முறைஆகும். இதற்கு முன்னதாக விசாலினி- மத்தியப்பிரதேச தலைநகர்போபால், கர்நாடகாவின் மங்களூரு, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட 8 சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமைவிருந்தினராகக்(ChiefGuest) கலந்துகொண்டு கீநோட் உரையாற்றியுள்ளார் (Keynote Address) என்பது குறிப்பிடத்தக்கது. 14வயதில், கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் சிறப்புரை ஆற்ற இருக்கும் நெல்லை பள்ளி மாணவி விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

4 comments:
விசாலினிக்கு வாழ்த்துக்கள்...
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் மாணவி விசாலினிக்கு எனது வாழ்த்துக்கள்!
Congrats Vishalini. Miss u ma.
Congrats Vishalini. Miss u ma.
Post a Comment