இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 31 December, 2010

இன்று ஒரு இனிய(!) தகவல் - குளிர்பானங்கள்.

                                    வெயில் காலம் வந்துவிட்டால், வெளியில் செல்லும்போதெல்லாம் வண்ண வண்ண குளிர் பானங்கள் வாங்கி குடிப்பது நம் வாடிக்கை. அப்படி குடிக்கின்ற குளிர்பானங்களில், பூச்சி கொல்லி மருந்துகளின் படிவங்கள் காணபடுவதாக பல பகிர் தகவல்கள் பரவிநின்றன. நாம் குடிக்கின்ற குளிர்பானங்கள் நம் உடலை குளிர்விக்குமா?


Follow FOODNELLAI on Twitter

Thursday 30 December, 2010

இன்று ஒரு இனிய(!) தகவல் - காபி & டீ

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ - கண்டிப்பாய் பருகுவது நம்மில் 
பலரின் வாடிக்கை. காபி மற்றும் டீயில் செய்யப்படும் கலப்படங்கள்
 என்னென்ன? காண்போமா! 

 
                                  என்ன   காபி  குடிக்க போலாமா?  
Follow FOODNELLAI on Twitter

Wednesday 29 December, 2010

இன்று ஒரு இனிய(!)தகவல் - ஆப்பிள்.


           தினம் ஒரு ஆப்பிள் தின்று வந்தால், திடகாத்திரம் தீர்க்கமாய் கிடைத்திடும்--உடலுக்கு மாத்திரம். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் எனக்குள்ளும் உண்டு.
                        இன்று, கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் அத்தனை சத்தானதா? சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா? சற்றே சிந்திப்போம்.
                             உங்கள் சிந்தனைக்கு காட்சிகள் சில:

Follow FOODNELLAI on Twitter

Tuesday 28 December, 2010

இன்று ஒரு இனிக்கின்ற(!) தகவல் -மஞ்சள்.

                                  
                                         மஞ்சள், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் அன்று தொட்டு இன்று வரை இடம் பெற்றுள்ள ஒரு கிருமிநாசினி. அன்றாட சமையலில் மஞ்சள் பயன்படுத்த நம் முன்னோர் நம்மை ஊக்குவித்தனர். அந்த மஞ்சளில் கலப்படம்  எப்படி? பாருங்கள் இப்படி. 
தகவல்கள் தொடரும். . . . . . 
Follow FOODNELLAI on Twitter

Monday 27 December, 2010

குட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா?



             பகலில் குட்டித்தூக்கம் போடுபவரா நீங்கள்? பரவாயில்லை தொடருங்கள். மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம், அந்த நாளின் மீதிப்பொழுதை சுறுசுறுப்பாய்க் கழித்திட பெரிதும் உதவிடும். பகலில் தூங்கவே கூடாது, உடல் குண்டாகிவிடுமென எச்சரிப்போர்  பலர். பாருங்கள் இந்த செய்தியை:
          சீனாவில் நடைபெற்ற ஆராய்ச்சியிது. பிறந்து ஒரு மாதமான குழந்தைகள் முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு குழுவாகவும், ஐந்து வயதிற்கு மேல் பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டனர். இரு குழுக்களிலும் சேர்ந்து  தோ;ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் சுமார்  இரண்டாயிரம் பேர். அவர்களது தூக்கம்; தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டன. 
         முதல் குழவினர்  பத்து மணி நேரம் வரை இரவில் தூங்கினர். இரண்டாவது குழுவினர், ஒன்பதரை மணி நேரம் வரை தூங்கினர். இரு குழுக்களிலும், சில குழந்தைகள் இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கினர். ஐந்தாண்டு முடிவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறு குழந்தைகளில், 33 சதவிகிதம் பேரும், சிறுவர்களில் 36 சதவிகிதம் பேரும் உடல் பருத்திருந்தனர்.
         உடல் பருமனடைந்தவர்களில், பெரும்பாலானோர், குழந்தைப்பருவத்தில்இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்கள் என்பது தெரியவந்தது. அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்த உண்மை யாதெனில்,இரவில் துhக்கம் தொலைத்தலே, உடல் பருக்க முக்கியமான காரணமாகும், பகல் நேர குட்டித்தூக்கம் உடல் பருக்க வைப்பதில்லை என்பதே.
Follow FOODNELLAI on Twitter

Sunday 26 December, 2010

உணவு கலப்பட உரையின் உலா.

                                      அனைவருக்கும் வணக்கம். உணவு கலப்படம் குறித்த எனது உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் உலா வந்தது.  அதனை தொகுத்து உங்கள் பார்வைக்கு படித்துள்ளேன். பார்த்து, கேட்டு,  ரசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஒரு பகுதி இப்போது தொகுத்துள்ளேன். தொடர்ந்து அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கின்றேன். 

http://www.youtube.com/watch?v=WudmvjvIhBM
                                     
இதே போன்ற மற்றொரு பேட்டி, வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் (27.12.10,28.12.10&29.12.10) ஆகிய தேதிகளில், AMN டிவியில் சென்னை தவிர்த்த புறநகர் பகுதிகளிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இரவு ஒன்பது மணிக்கு, "உஷாரையா உஷாரு" என்ற  நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது.  அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் வலம் வரும். பாருங்கள். 
                                      நெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி நகரம் தவிர்த்த பிற  பகுதிகளில்,அநேகமாக புத்தாண்டு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பபடலாம். அதாவது    01.01.2011,02.01.2011&03.01.2011 தேதிகளாக  இருக்கும். 
                                       நன்றி நண்பர்களே.
Follow FOODNELLAI on Twitter

Thursday 16 December, 2010

தயிரில் கலப்படம் - தப்புவது கடினம்

                             பசுக்கள் தரும் பாலைக்காய்ச்சி, பக்குவமாய் உரையும் ஊற்றி,அற்புதமாய் அறுசுவை உணவுடன் அம்மா பருகக்கொடுக்கும் தயிரும்,மோரும் தலைமுறைகள் மாற்றம்போல் தலை கீழாய் போனதெப்படி?
                              பசும்பாலிற்கும், எருமைப்பாலிற்கும் சுவை, சத்து, குணம் என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. நம் நாட்டு பசு தரும் பாலிற்கும், வெளிநாட்டுப்பசு தரும் பாலிற்கும் வேறுபாடுகள் உண்டு.பசுக்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பவும், நாம் அவற்றிற்கு வழங்கும் உணவிற்குத் தக்கவும்
பாலின் தரம் வேறுபடும்.
                                    ஒரே  நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்கு மாநிலம் பாலின் தரம் வேறுபடும். பால் என்று எடுத்துக்கொண்டால், கொழுப்பு சத்து, கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள் என்று இரு வகையான சத்துக்களே அதில் உள்ளன. பிற சத்துக்களில், பாலில் அடங்கியுள்ள உயிர் சத்துக்கள், தாதுக்கள் ஆகியவை அடங்கும். 
                                     பஞ்சாப், ஹரியானா, சண்டிகார்  மாநிலங்களில் உள்ள பசுக்கள் தரும் பாலில், கொழுப்பு சத்து 4 சதவிகிதமும், பிற சத்துக்கள் 8.5  சதவிகிதமும் இருக்கும். அதுவே, நமது நாட்டின் பிற மாநிலங்களில் கொழுப்பு சத்து 3.5 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.
                                     நாலுக்கும் ஐந்திற்கும் நடுவில் நாங்கள் விற்கும் பாலில் கொழுப்பு சத்து இருக்கும் என்ற விளம்பரம் எல்லாம் செயற்கையாய் கொழுப்பு சத்து  ஏற்றம் செய்யப்பட்ட பாலையே குறிக்கும்.
                    ஒரு உணவு பொருளில் இயற்கையாய் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதும் கலப்படம் என்றே உணவு கலப்பட தடை சட்டம் சொல்கிறது. இயற்கையாய்  பசுக்கள் சுரக்கும் பாலிலிருந்து, கொழுப்பை சுரண்டி எடுப்பதே மனிதனின் மகத்துவம்.  


                                  அப்பப்பா, ஆக்சிடோசின் கொடுமை என்றால், இது அதைவிட கொடுமை அன்றோ.     ஆக்சிடோசின் ஊசியை போட்டு, அதிகம் பால் கறக்க, 
பால்காரருக்கு ஆசை. பாலிலுள்ள கொழுப்பை எடுத்து, நெய்யை விற்க பால், தயிர் விற்பவருக்கு ஆசை. அதனை குடிக்க  குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தன? 
                                 இங்கும் ஓர் உணவு விடுதி. அரசு ஊழியர் குடியிருப்பிற்கு அருகில் உள்ளதால், வார இறுதி நாட்களில், அமர்ந்து உணவருந்த அடிபிடியாய் இருக்கும். அது மட்டுமல்ல, ஓய்வு பெற்றோர்  இல்லங்களுக்கே சென்று உணவை வழங்கும் உத்திகளும் உண்டு. 
                                        ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு மதிய வேளையில், அதிரடி சோதனை மேற்கொண்டோம். உணவுடன் வழங்கப்பட்ட தயிரில் கலப்படம் செய்யபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில்  மாதிரி எடுத்து மதுரையில் உள்ள பகுப்பாய்வகம் அனுப்பி வைத்தோம்.  
                                            கிடைத்த அறிக்கையில்,  உணவு மாதிரியாக அனுப்பப்பட்ட தயிரில், கொழுப்பு சத்து குறைவாக இருப்பதாக குறைகள் கூறப்பட்டிருந்ததால், உரிய அனுமதி பெற்றே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 14 December, 2010

சுழற்கழகத்தில் ஓர் நாள்.


                                    வழக்குகள் போடுவது மட்டுமல்ல! வழிமுறைகளையும் சொல்லி தெளிய  வைப்பதும் எங்கள் பணிதான். திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தில், கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் சிறப்பு  அழைப்பாளராக  கலந்து கொண்டேன். 
                                 கலப்படம் குறித்த கலந்துரையாடலாய் அமைந்தது அது. வந்திருந்த அனைவரும் கலப்படதிற்கு எதிராய்  போரிடுவதாய் சூளுரைத்தனர். கலந்துரையாடலுக்கு  பின்னே  வந்த கேள்வி நேரம் கலகலப்பாய் சென்றது. 
                                     அனைவருக்கும் வந்த ஒரே சந்தேகம்! 
                                  இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும்போது அரட்டல் மிரட்டல்கள் வராதா? அடியாள்தான் வராதா?
                                     வரும், வராமலென்ன? வருவதை சமாளிக்க தெரிய வேண்டும். அதுதான் சாமர்த்தியம். 
                                     தொடர்ந்து கலப்பட தயிர் குறித்த செய்தியுடன் சீக்கிரம் எழுதுகிறேன்.



Follow FOODNELLAI on Twitter

Sunday 12 December, 2010

ஒரு செய்தி- ஒரு பார்வை.

                               ஒரு விடுமுறை நாளின் விடிகாலைப்பொழுது. பாதாள சாக்கடை நீர்  வீதியில் பாய்ந்து ஓடுகிறதென்றோர் புகார். ஆம். ஆற்று வெள்ளமாய்  ஊற்றெடுத்து ஓடியது கழிவு நீர். துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல்கள் பறந்தன. அத்தனை பேரும் அங்கு திரண்டனர். 
         பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதக்கழிவை மனிதனே அகற்றக்கூடாதென்பதே அதன் தாத்பயம். தமிழ்நாட்டரசும்  பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை  சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அரசாணை பிறப்பித்துள்ளது.
         எப்படி சீர்செய்வது இதனை என்றாலோசித்தோம் இயந்திரங்களின் உதவியை நாடினோம்.
         எப்படி ஏற்படுகின்றன இத்தகைய அடைப்புகள்? 
                பெரும்பாலும் உணவகங்கள் தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்துதான் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறும். இத்தகைய இடங்களில் பல்வகைப்பட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்கள் கழிவுகளை கண்டபடி கழிவு நீர் குழாய்களில் போடுகின்றனர். அவ்வாறு போடப்படும் கழிவுகள் வெளியேறும் குழாயினை பாதாள சாக்கடை பிரதான குழாய்களில் நேரடியாக இணைப்பதால் அவை பிரதான குழாயின் நீரோட்டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
         என்ன செய்யலாம்? பெரிய  நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை நேரடியாக பிரதான குழாயில் இணைக்கக்கூடாது. பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை பிரத்யோக தொட்டி (DIAPHRAGM CHAMBER) ஒன்றில் இணைத்து, அதன்பின்னர் அதனை பிரதான குழாயுடன் இணைக்கவேண்டும்.
                  பிரத்யோக தொட்டியில் அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் வடிகட்டப்படுவதால் பிரதான குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவேதான் பெரிய  வணிக நிறுவனங்களிலிருந்து கழிவு நீரை பிரதான குழாய்களில் இணைப்பதற்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நாம் என்ன செய்யலாம்?
                               மனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம். கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் மட்டுமே வெளியேற உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம். அதுவே நாம் மனித சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவையாகும்.
Follow FOODNELLAI on Twitter

மனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.

                                   திருநெல்வேலி மனித உரிமைகள்  கழகம் மற்றும் டீம் டிரஸ்ட் இணைந்து  மாலை வேளையில் நடத்திய ஓர் விழாவில், 2010 ஆண்டில் சாதனை படைத்த பல்வேறு துறை சார்ந்தோருக்கு பாராட்டும், நற்சான்றும் வழங்கினர்.  
  
                                   விருதுநகர், முதன்மை  மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்கள். திருநெல்வேலி கோட்டாட்சி தலைவர் திருமதி. தமிழ்செல்வி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் திரு. மனோகர், பாளை மத்திய சிறை  கண்காணிப்பாளர் திரு.ஆனந்தன், மதிப்பிற்குரிய அந்தோணி குருஸ் அடிகளார்,ஜானகிராம் அந்தோணி,மனித உரிமைகள் கழக மாவட்ட தலைவர் திரு. திருமலைமுருகன் என சகல கலா வித்தகர்கள் வீற்றிருந்த சபையில், பார்வையற்ற பள்ளி மாணவியரின் நடனம் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பதைவிட நெகிழ வைத்தது என்பதே பொருந்தும். 
                                      எத்தனைதான் இத்தகைய பாராட்டுக்கள் பெற்றாலும், நமது பதிவுலக நண்பர்கள், அதிலும் சித்ரா மேடம், ராஜமாணிக்கம் சார், சக்திமுருகன், நாராயணன் போன்றோர் ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் தங்கள் முத்திரை சொற்களை பதிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதிதான்.
Follow FOODNELLAI on Twitter

Friday 10 December, 2010

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.

                         நண்பர்  இளங்கோவன் நம் சங்க நடவடிக்கைகளில் துடிப்பானவர். அவரிடமிருந்து  மெயில் வந்ததென்றால், அதில் எப்படியும் ஒரு நல்ல செய்தி இருக்கும். அது  ஒரு நபர் கமிஷன் சம்பந்தப்பட்ட அரசாணையாக இருக்கலாம் அல்லது சங்க உறுப்பினர்களுக்கு  தேவையான முக்கிய தகவல்களாக இருக்கலாம். அதனை அனைவருக்கும் மின்னஞ்சலில் தருவது அவர் பணியாயிருக்கும். 
                                             அப்படித்தான் இன்றும் எனது இன் பாக்சில் இனிய நண்பர் இளங்கோவனின் இ-மெயில். பார்த்தால், பயனுள்ள  செய்தியது. உணவு பாதுகாப்பு சட்டம் ஜனவரியில் அமலுக்கு வருவதாக, FSSAI இன் சேர்மேன்  திரு. சுவர்த்தன் அவர்கள் தெரிவித்த செய்தி. ஜனவரி  மாதம் உணவு பாதுகாப்பு விதிகள் அரசிதழில் வெளியிடப்படுமென்றும், அவ்வாறு  வெளியானவுடன், இந்தியா முழுவதும் மேற்கண்ட சட்டம் அமலுக்கு வந்து விடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, தை பிறந்தால் வழி பிறக்கும்.
                                                 உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்போது, நம் உணவு பொருட்களின் தரம் அகில உலக அளவில் உயரும். உலக அளவில், உன்னதமான, ஒருங்கிணைந்த சட்டமாக இது இருப்பதால்,  உலக நாடுகள் நம்மை கண்டு வியக்கும்.  நம் அனைவருக்கும், மிகவும் பாதுகாப்பான உணவு கிடைக்கும். 
                                                      நல்ல விஷயம்தானே, நடக்கட்டும் சீக்கிரம். 
FSS ACT implemented JAN-2011-PI Suvrathan, Chairman of Food Safety and Standards Authority of India (FSSAI)                                   An integrated food law ‘Food Safety and Standards Act’ (FSSA) will come into force in January next year replacing the Prevention of Food Adulteration Act, a senior official said here today. 
                                  “From January next onwards the Prevention of Food Adulteration Act which is currently in force in the country will be repealed and the ‘Food Safety and Standards Act’ will come into being. The new law is a scientific law which tries to promote food safety,” Food Safety and Standards Authority of India (FSSAI) Chairman P I Suvratan said.
                                    Addressing the 43rd Annual National Conference of Indian Dietetic Association at the National Institution of Nutrition (NIN) here, he said “The rules and regulations of the FSSA are ready and it has gone to the Government of India for notification. By January, I think it will be notified by the Government and once it is done each state will now have to withdraw the Prevention of Food Adulteration Act,” he said.
                                    Suvratan said “not many countries have a comprehensive functional food laws even now and India will be the first one to think about in that direction and we are proceeding very cautiously.”
                                   “FSSA is having a scientific approach to development of food standards and to regulate whole food supplements in the country. Henceforth, we will be working with the manufacturers who will be responsible to ensure food safety.”
                                      He further said international markets will seek details on the components of Indian traditional foods and if clinical studies have been conducted on such products to establish safety which we don’t have any.
                                     “Next year will be extremely critical for India to develop scientific justification for traditional foods. It (traditional foods) may be safe, but we have not established the safety in that. We have to generate scientific evidence,” Suvratan said.

Follow FOODNELLAI on Twitter

Thursday 9 December, 2010

டீ குடிக்கலாம் வாங்க.

                                 தேயிலையில் கலப்படம், தெரிந்த பின்னர், அருந்த வரும் அச்சம்.  தெள்ள தெளிவாய் எடுத்துரைத்த குமுதம். வீடுகளில் அடுப்பங்கரை வரை சென்று, விபரீதங்களை தாய்குலங்களிடம் விளக்குவதால், இக்கட்டுரை தனி சிறப்பு பெற்றது. செய்திதாள்களில் வருபவை பெரும்பாலும் ஆண்களையே  சென்றடைகின்றது. குமுதம் போன்ற வார இதழ்கள் தரும் செய்திகள், நம் வீட்டு எஜமானர்களையும்(!)  எளிதில் சென்றடைகின்றது.
 
                                   தூதுவளை மிட்டாயில், வாந்தி வருவதை தடுக்கும் மருந்துகளின் கலப்படம்.  எத்தனை முறை சொன்னாலும்,  எத்தர்கள் இன்னும் திருந்தவில்லை. ஒன்றும் அறியா பிஞ்சு குழந்தைகள் கூட, நஞ்சென்று அறியாமலே தின்று, நரம்பு கோளாறுகளால் நலிவுருகின்றனர். எனவேதான்,அத்தனை பத்திரிகைகள் வாயிலாகவும், எடுத்து சொல்கிறோம். 
                                         ஒவ்வொரு பத்திரிக்கையும், ஒருவர் திருந்த வழி வகுத்தால், நம் அனைவருக்குமே  நன்மைதான்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 8 December, 2010

சீ சீ இந்த பழம் புளிக்கும்.

அதில் என் செய்தியினை கண்டவுடன், அதனை ஸ்கேன் செய்து எனது மெயிலுக்கு  அனுப்பியுள்ளார். அதுதான், நீங்கள் பார்க்கும் "உஷார்" பகுதி. நன்றி (தேவா) நண்பரே.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 7 December, 2010

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

                                காலங்கள் கடந்தாலும், கண்டிப்புகள் தொடர்ந்தாலும், மனித மனங்கள் மட்டும் இன்னும்  மாறவில்லை.
தி ஹிந்து-07 .12 .10
தினத்தந்தி- 07 .12 .10
 
                                                          தினமணி-07 .12 .10
இந்தியன் எக்ஸ்பிரஸ்-07 .12 .10
 
                                                            தினகரன்-07 .12 .10
                திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. 
தினமலர்-07 .12 .10 
                                         மாறுவதற்கு அவர்களுக்கு  மனம் இல்லை என்றால், மாற வைப்பது ஒன்றே வழி. நுகர்வோரும் இனி விழித்திருந்தால், நுட்பங்கள் நன்றாய்  அறிந்திருந்தால், மாற மனம் அற்றோரும் மாறித்தான் ஆக வேண்டும். 
                                விழித்திருப்போம் - விஷயங்கள் அறிந்திருப்போம்.
Follow FOODNELLAI on Twitter

Thursday 2 December, 2010

தொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.

                                         மருத்துவ அலுவலர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மாநகராட்சி ஆணையரின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.  
                                    நேற்று காலை, பாளை பகுதி உணவகங்களில்  திடீர் ஆய்வு.கடந்த வாரம் சைவ உணவு விடுதிகள் சரியாய் செயல்படுகிறதா  என்று பார்த்தோம். அன்று தகுதி இழந்தது ஆரியபவன். இந்த வாரம் எங்கள்   ஆய்வில் மாட்டியது, அசைவ உணவு விடுதிகள்.
                                    முதலில் பார்த்த உணவகம் மூடுவதற்கு முழு தகுதி பெற்றிருந்தது.மனித  உணவு தயாரிக்குமிடம் மாசு படிந்து காணப்பட்டது. குளிர்பதன பெட்டியில், உணவு பொருளும், கரை நீக்கும் அமிலமும் ஒரு சேர வைக்கப்படிருந்தன. ஏனிப்படி என்று கேட்டால், குளிர்பதன பெட்டி உயிர்விட்டு போனதால், இரண்டையும் சேர்த்தே இருப்பில் வைத்தோம் என்றனர். என்னே ஒரு பொறுப்பற்ற செயல்!
                                    மழை நேரம், தொற்று நோய்கள் மழ மழவென்று பரவும் என்பதால்,  மனம் வரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, உடனே மூட சொன்னோம். இன்றைய ஆய்வில் இம்சை கொடுத்தது ஹோட்டல் பிருந்தாவன்.
                                    என்ன செய்வது இவர்களை? மக்களாய்  பார்த்து மனம் வெறுக்காதவரை, மாற்றங்களை  இவர்களிடம் எதிர்பார்த்தால்,  ஏமாற்றம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 24 November, 2010

ஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.

                                          இரண்டு மூன்று நாட்களாய் நெல்லையில் நல்ல மழை. இடி மின்னலுடன் இறங்கியது மழை.  அனைத்து உணவகங்களிலும், அருந்திட வெந்நீர் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.சுத்தமாய், சுகாதாரமாய் உணவகங்கள் நடத்திட எச்சரிக்கைகளும் விடுத்திருந்தோம்.   என்னதான் நடக்கிறது என்று அதிரடி ஆய்வு நடத்திட ஆணையர் அறிவுறுத்தினார்.  நேற்று காலை, சந்திப்பு பகுதி உணவகங்களில், சக ஆய்வாளர்களுடன் சென்று சட்டென்று ஆய்வு நடத்தினோம்.
                                 முதலில் பார்த்த உணவகத்தில், முன்புறம் உணவருந்தும் அறையினை  பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளும் விதமாய் பகட்டாய் அலங்கரித்து வைத்திருந்தனர். இப்படித்தான் இருக்குமென்றெண்ணி, அடுபங்கரைக்குள் அடி எடுத்து வைத்தால், இருந்த நிலை எடுத்து சொல்ல வார்த்தைகள்  வரவில்லை.
 
                                 முதல் நாள் செய்த முத்தான பலகாரங்கள், அத்தனையும் அடுபங்கரையில் அணிவகுத்து நின்றிருந்தன. இவையேன் இங்கிருக்கின்றன என்று வினவினால், விற்பனைக்கல்ல என்ற  ஒற்றை வார்த்தைதான் வந்தது பதிலாய். ஆங்காங்கே அழுகிய காய்கறிகள், அதிலிருந்து வந்தன அருமையான வாசங்கள்.
                               ஆலோசித்தோம்- அதிகாரிகளின் அறிவுரை பெற்றோம். அங்கிருந்த அனைவரையும் வெளியேற சொல்லி, சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யும்  வரை உணவகத்தை மூட சொல்லி உத்தரவிட்டோம். 



                                தொடர்ந்து நடத்திய ஆய்வின்போது, கலப்பட தேயிலையை, கலக்கம் ஏதுமின்றி, கடைகளில் விற்று வந்த கயவன் ஒருவன் கண்களில் பட்டான். சிறிது தேயிலையை எடுத்து, செய்தி தாள் மீது வைத்து தண்ணீர் ஊற்றி பார்த்தால் தெரியும் அதன் தரம் என்று  பார்த்து கொண்டிருக்கும் போதே பைகளை போட்டு விட்டு பறந்தான் அந்த படுபாதகன். பைகளில் இருந்தது பத்து கிலோ தேயிலை. பறிமுதல் செய்து அழித்தோம் அத்தனையும். 
 
இதுவரை செய்திதாள்களில் வந்த செய்திகள் பார்த்தோம் -
இனி செய்முறை விளக்கம் பார்ப்போம். 
 
கலப்பட தேயிலையை, மை உறிஞ்சி தாள்  மீது வைத்து சிறிது தண்ணீரை ஊற்றினால், அதிலுள்ள செயற்கை நிறங்கள், அந்த தாள் மீது விரைவாக பரவும். 
சுத்தமான கலப்படமில்லா தேயிலை மீது தண்ணீரை ஊற்றினால்,
நிறங்கள் விரைவில் பரவாது. 

நண்பர் மணாழகனின் அருமையான பதிவு ஒன்று சென்றுதான் பாருங்களேன்: 
http://foodsafetynews.wordpress.com/2010/11/24

Follow FOODNELLAI on Twitter