கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன். மறுமுனையில் பேசியவரோ, தம்மை காளீஸ்வரன் என்று அறிமுகம் செய்து கொண்டு, என் பெயரைச் சொல்லி, என்னிடம் பேச வேண்டுமென்கிறார். எனக்கோ ஆச்சரியம்.
