நம் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழும், வரும், போகும், ஆனால் சில நிகழ்வுகள், நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும்-என்றும் பசுமையாய். கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு கலர் கலர் கனாக்காலம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி, எப்போதும் சந்தோஷமாய்க் கழிந்த காலம். எனக்கும், என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தித்தந்த காந்திகிராமம் தந்த ஒரு வருட கால சுகாதார ஆய்வாளர் கல்வி பயின்ற காலம் என்றென்றும் எண்ணி எண்ணி நன்றியுடன் இன்புறும் காலம்.
