இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 13 May 2013

கற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி

 பயிற்சி வகுப்பில் பாந்தமாய் முனைவர் திரு.சுப்பிரமணியன்
                                        
                        மாதா, பிதா, குரு தெய்வம் என்பது நம்  ஆன்றோர் வாக்கு. ஆசிரியர் ஒருவருக்கு சொல்லும் ஒரு செய்தி, அவர் கற்பிக்கும் ஓராயிரம் குழந்தைகளைப் போய்ச் சேரும். அந்த ஆசிரியர் ஒரு குழந்தையிடம் சொல்லும் ஒரு நல்ல செய்தி, அக்குழந்தையின் குடும்பத்தையே யோசிக்கச்செய்யும். இத்தகைய ஆக்கபூர்வமான செயல்  கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் மகராஜ்களின் ஆசிகளுடன், அக்கல்லூரியில் பணிபுரியும் முனைவர் திருசுப்பிரமணியன் அவர்களின் ஆர்வத்தால், ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. 
Follow FOODNELLAI on Twitter

Wednesday 8 May 2013

இது இந்த நிமிஷத்தின் தேவை.

                
                     இன்று, தமிழக சட்டப்பேரவையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், குட்கா, பான்மசாலா பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்க,விநியோகிக்க, விற்பனை செய்ய தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். மனமார்ந்த நன்றிகள்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 7 May 2013

இது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.




இதை வழங்கிய அரசிற்கும், நமது துறை ஆணையருக்கும், இந்த உத்தரவு கிடைக்க முயற்சி எடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Follow FOODNELLAI on Twitter

Monday 29 April 2013

இது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்

நன்றி: தமிழ்முரசு.
                                      
                       சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் தரமான தண்ணீர் கிடைத்திட தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.  
Follow FOODNELLAI on Twitter

Monday 22 April 2013

கோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.


           கோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும். 

அத்தனை விஷயமிருக்கு இந்த பாக்கட்/ பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரில்!


Follow FOODNELLAI on Twitter

Friday 12 April 2013

கலப்படம்  கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தருவது வரை


                         
                             உணவில் கலப்படம் உள்ளபடியே அதிகம்தான். கண்டுபிடிச்சா, அதை நிரூபிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பனும். அதில் கலப்படம் இருக்குன்னு அறிக்கை வரணும். வந்துட்டா, வழக்கு, வாய்தான்னு அலையணும். இதோ ஒரு உணவு மாதிரி எடுத்து அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். முதலில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கணும், உயர் அதிகாரிகளிடம், உரிய அனுமதி பெற்று வழக்குத் தொடரணும்.
டிஸ்கி: துறை சார்ந்த அலுவலர்கள், வழக்குத்தொடரும் நடைமுறை அறிந்து கொள்ள ஏதுவாக இங்கு பகிர்ந்துள்ளேன். 
Follow FOODNELLAI on Twitter