அன்றாடம் ஆன்மீகப் பதிவுகள் மூலம், பதிவுலகில் தனக்கென்றோர் தனியிடம் பிடித்து வரும் சகோதரி ராஜராஜேஸ்வரியின் அழைப்பை ஏற்று ”இந்த வருடத்தில் நான்” என்ன எழுதியுள்ளேன் என்று திரும்பி பார்க்கின்றேன். ‘நான்” என்ற வார்த்தை தலைப்பில் வருவதைத் தவிர்த்திடவே தலைப்பை மாற்றியுள்ளேன்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Thursday 29 December, 2011
Wednesday 28 December, 2011
பாம்பாறு வழி வாணதீர்த்தம்
கதிரவனின் கதிர்களின் பிண்ணனியில் வாணதீர்த்தம் |
கடந்த வாரத்தில் ஒரு நாள். காலை நேரத்தில் களை கட்டியது எங்கள் பயணம். நண்பர்கள் நால்வர் சேர்ந்து போட்ட திட்டத்தின்படி, அவரவர் வீட்டில், அழகாய் ஒரு (பொய்க்)காரணம் சொல்லிவிட்டு, சந்திக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதிகாலையில் அனைவரும் சந்தித்தோம்.
Labels:
ஊர் சுற்றலாம் வாங்க,
பயணம்,
பாம்பாறு,
வாணதீர்த்தம்.
Thursday 22 December, 2011
நெஞ்சில் சுமந்து நிற்கும் நினைவலைகள்.
என் மகளின் திருமண உறுதி நிகழ்ச்சி கடந்த 14.12.2011ல், சிறப்புற நடைபெற்றது. நேரில் வந்தும், மெயில் அனுப்பியும்,போஸ்ட்டில் கமெண்டியும், சாட்டில் வந்தும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.
Labels:
திருமண உறுதி தாம்பூலம்,
நன்றி அறிவிப்பு,
நினைவலைகள்,
பகிர்வு
Thursday 1 December, 2011
பதிவர் வீட்டு விழா
பதிவுலக சொந்தங்களே, என் இனிய மகளுக்கு 14.12.2011ல், திருமணம் நிச்சயம் செய்கின்றோம். 25.04.2012ல், நெல்லையில் வைத்து திருமணம். அதற்கான அழைப்பிதழ், தனியே வலைப்பூவில் மலரும்.
மணமக்கள்: ராஜா & பிருந்தா.
மண நாள் : 25.04.2012
இடம் : செல்வி மஹால், திருநெல்வேலி.
டிஸ்கி:தற்போது, திருமண உறுதி விழா ஏற்பாடுகளில் மூழ்குவதால்,விழா முடிந்ததும் புத்தாண்டில் மீண்டும் சந்திக்கிறேன்.
Saturday 19 November, 2011
சட்டம் என்ன சொல்கிறது?-சற்றே சிந்திப்போமா!
மேடையில் சட்டநாதன், கலியனாண்டி,சங்கரலிங்கம்,இப்ராகீம். |
Friday 11 November, 2011
Tuesday 8 November, 2011
அப்பளம் தந்தது ஆறு மாதம் சிறை.
அப்பளம் நம் நாட்டில் அன்றாடம் அனைவர் வீட்டிலும் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள். எப்படி விடுவார்கள் அதில் மட்டும் கலப்படம் செய்யாமல்? பார்ப்போமா!
Labels:
அப்பளம்,
உணவில் கலப்படம்,
தண்டனை,
வழக்கு
Tuesday 1 November, 2011
மழைக்கால நோய் தடுக்க மருத்துவ முகாம்.
கோடை வெயில் கொளுத்திய நெல்லையில், குளிர் மழையும் வந்தது. கூடவே, குளிர்கால நோய்களையும் கூட்டி வந்தது. தும்மல், இருமல், ஜலதோசத்தில் தொடங்கி, சகல நோய்களும் பவனி வந்தாச்சு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முழு வீச்சில் செய்தாலும், இயற்கையை வெல்ல, நம்மால் முடியுமோ!
Friday 28 October, 2011
Friday 21 October, 2011
முதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்.
டிஸ்கி: இது கடந்த வருடம், எனது மும்பை பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவம். மீள் பதிவு. தேர்தல் பணி-செல்கிறேன்.
பத்து நாட்களுக்கு முன் பம்பாய் போனேன். என்னுடன் எனது மூத்த சகோதரரும் வந்திருந்தார். இளைய சகோதரரின் மகளுக்கு வளைகாப்பு. நாகர்கோவிலிலிருந்து வந்த ரயிலில் நெல்லையில் ஏறியதும், எடுத்துச் சென்ற உடமைகளை சீட்டிற்கு அடியில், அடுக்கி வைத்து நிமிர்ந்தால், எதிர்த்த சீட்டில் பல்லுப்போன பாட்டியொன்று பாங்காய் அமர்ந்திருந்தாள். அவருக்கருகில் நாற்பதுகளில் ஒரு நளின சகோதாரி. அத்தனை நளினமாய், பாட்டியின் கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார். இருவரும் பேசுகையில் தெரிந்து கொண்டோம், இவருக்கவர் உறவில்லையென்பதை.
நெல்லையின் எல்லைகூட தாண்டவில்லை. எங்களுக்குப் பின்பக்க இருக்கையிலிருந்து சுடச்சுட காபி வந்தது. எடுத்து வந்து தந்தது பாட்டியின் மைந்தனாயிருக்க வேண்டும். அறுபதில் ஐந்தைத் தொலைத்திருந்தார் யோசனையுடன் வாங்கி அருந்திய பாட்டியிடம் சந்தோசமில்லை! இரண்டு மணிக்கொரு முறை, இன்முகத்துடன் ஏதேனும் ஒன்றை பாட்டியிடம் கொடுப்பதும், அதை பாட்டி பாதி மனதுடன் வாங்கி உண்பதுமாய்ப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், பாட்டி ஏதோ முனுமுனுப்பது மட்டும் காதில் விழுந்தது.
பிற்பகல் வந்தது. பாட்டிக்கு பாங்காய் உணவும் வந்தது. வந்து கொடுத்ததும் அவர்தான். இப்படியோர் மகனைப் பெற்றெடுக்க, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தீர்? மெல்லக் கொக்கியிட்டது என் கேள்வி!
பாட்டியின் முகத்தில் பல்லாயிரம் பாவங்கள். இவரு எம்மருமகன். எம்மகா, அடுத்த பக்கமிருக்கா. அங்கிருந்துதான் எல்லாம் வருது. ஆனா! அவ வந்து, முகம் குடுத்து என்ட பேசமாட்டா. பணத்திமிர் . . . . . என்று இன்னும் பல. வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்திற்கு, வறண்டுவிட்டது என் நாக்கு. அத்தனையும் சோகம்.
அடுத்த நாளும் வந்தது. அத்தனை முறையும் உணவும் வந்தது. ஆனால், பாட்டியின் மகள் மட்டும் வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை. பாட்டியின் முனகலும் நிற்கவில்லை.
பாட்டி! பாசமில்லாமலா பாங்காய் உணவு வருது என்று சொன்ன எங்கள் வார்த்தைகள் எதுவும் எடுபடவில்லை. பாவம், பாசத்திற்கு ஏங்கும் பாட்டி.
என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், மகள் வந்து ஒரு முறையேனும் அந்தத் தாயிடம் பேசியிருக்கலாம். பேசாததால், மருமகனே, அத்தாய்க்கு மகனானான்.
பாட்டி இறங்குமிடத்திற்கு முந்திய ரயில் நிலையத்தில், அருகிலிருந்த அந்த நளின சகோதரி இறங்கும்போது அவரை ஆசிர்வதித்து அனுப்பவும் அந்த பாட்டி மறக்கவில்லை.
எத்தனைதான் வீட்டில் மனக்குறைகள் இருந்தாலும், ரயிலில் ஏறும் முன், அதை மூட்டை கட்டியிருக்க வேண்டும். அத்தனைபேர் மத்தியிலும், அதை காட்டியிருக்கக் கூடாது.
எத்தனை நாள் சுமந்து பெற்றாளோ! என்றென்றும் முதுமையைப் போற்றுவோம்.
மும்பையில், ரயிலிலிருந்து இறங்கும்வரை, என் சோகம் மட்டும் மாறவில்லை. இன்றைக்கும் என் மனதில் பாட்டியின் முகம் மட்டும் அழியவில்லை.பிற்பகல் வந்தது. பாட்டிக்கு பாங்காய் உணவும் வந்தது. வந்து கொடுத்ததும் அவர்தான். இப்படியோர் மகனைப் பெற்றெடுக்க, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தீர்? மெல்லக் கொக்கியிட்டது என் கேள்வி!
பாட்டியின் முகத்தில் பல்லாயிரம் பாவங்கள். இவரு எம்மருமகன். எம்மகா, அடுத்த பக்கமிருக்கா. அங்கிருந்துதான் எல்லாம் வருது. ஆனா! அவ வந்து, முகம் குடுத்து என்ட பேசமாட்டா. பணத்திமிர் . . . . . என்று இன்னும் பல. வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்திற்கு, வறண்டுவிட்டது என் நாக்கு. அத்தனையும் சோகம்.
அடுத்த நாளும் வந்தது. அத்தனை முறையும் உணவும் வந்தது. ஆனால், பாட்டியின் மகள் மட்டும் வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை. பாட்டியின் முனகலும் நிற்கவில்லை.
பாட்டி! பாசமில்லாமலா பாங்காய் உணவு வருது என்று சொன்ன எங்கள் வார்த்தைகள் எதுவும் எடுபடவில்லை. பாவம், பாசத்திற்கு ஏங்கும் பாட்டி.
என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், மகள் வந்து ஒரு முறையேனும் அந்தத் தாயிடம் பேசியிருக்கலாம். பேசாததால், மருமகனே, அத்தாய்க்கு மகனானான்.
பாட்டி இறங்குமிடத்திற்கு முந்திய ரயில் நிலையத்தில், அருகிலிருந்த அந்த நளின சகோதரி இறங்கும்போது அவரை ஆசிர்வதித்து அனுப்பவும் அந்த பாட்டி மறக்கவில்லை.
எத்தனைதான் வீட்டில் மனக்குறைகள் இருந்தாலும், ரயிலில் ஏறும் முன், அதை மூட்டை கட்டியிருக்க வேண்டும். அத்தனைபேர் மத்தியிலும், அதை காட்டியிருக்கக் கூடாது.
எத்தனை நாள் சுமந்து பெற்றாளோ! என்றென்றும் முதுமையைப் போற்றுவோம்.
Labels:
கட்டுரைகள்,
மருமகனே மகன்,
முதுமை
Monday 17 October, 2011
விவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.
விவேகானந்தர் கேந்திரத்திலுள்ள விவேகானந்தர் சிலை.
முதல் பகுதி: வார இறுதியில் ஒரு டே-அவுட்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்,கடல் நடுவிலிருந்த பாறை மீது, சுவாமி விவேகானந்தர் 1892ல், டிசம்பர்-25,26&27 தேதிகளில், தியானத்தில் இருந்துள்ளார். |
Tuesday 11 October, 2011
வார இறுதியில் ஒரு டே-அவுட்.
வாரம் முழுவதும் வேலை. வார இறுதியில் ஒரு டே- அவுட். அதிக வேலைப்பளு, உடலையும் , மனதையும் ஒரு சேர களைக்க வைத்த சனிக்கிழமை(01.10.11) மாலை. சட்டென்று எடுத்த முடிவில், திட்டமிடாப் பயணமாய் குடும்பத்துடன் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டேன்.(பதிவர் விஜயன் மன்னிப்பாராக-இது திடீர் பயணமென்பதால், சொல்லவும்,சந்திக்கவும் இயவில்லை)
Labels:
ஊர் சுற்றலாம் வாங்க,
கன்னியாகுமரி,
டே-அவுட்,
பயணம்
Friday 7 October, 2011
Tuesday 4 October, 2011
பதிவர்களின் பரிணாம வளர்ச்சி-சண்டையிலா?சேவையிலா?
பதிவுலகம் போகும் பாதை சரிதானா?
நாளொரு சண்டையும், பொழுதொரு பிரச்சனையும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. நம் பதிவுலகிலும், உள்குத்துப்பதிவு, ஆபாசப் பதிவு,ஒருவருக்கு- அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறேன் என்று சொல்லி ஓராயிரம் மெயில்கள், மாற்றுக்கருத்து பதிவு செய்தால், ஒடுக்கப்பார்ப்பது, ஒத்து வரவில்லையென்றால், வலைப்பூவை ஹாக் செய்வது
Labels:
சமூக சிந்தனை,
பதிவர்களின் பரிணாம வளர்ச்சி,
பதிவுலகம்
Tuesday 27 September, 2011
பத்திரிக்கை நறுக்குகள் உங்கள் பார்வைக்கு.
ஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே? இதோ பத்திரிக்கைகள் பேசுகின்றன, பாருங்கள். ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பெரியோர் மொழிக்கேற்ப, உப்பில் கலப்படம் செய்தோர், தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Labels:
உணவு கலப்படம்,
நறுக்குகள்,
பத்திரிக்கை செய்திகள்
Wednesday 21 September, 2011
நகர்ப்புறங்களில் பணியாற்ற உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியல்
அன்பு நண்பர்களே,
இன்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றின் மூலம், இதுவரை உள்ளாட்சிப்பகுதிகளில் பணியாற்றி வந்த உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பணிபுரிய உள்ள நகரப்பகுதியின் விபரமும் வெளியிட்டுள்ளார்கள்.
Monday 19 September, 2011
Friday 16 September, 2011
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா!
உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
பேணி வளர்த்தாய், பெரியவனானேன்.
Labels:
அன்னைக்கு அர்ப்பணம்,
இரங்கற்பா,
தொப்புள்கொடி உறவு
Thursday 1 September, 2011
மல்லிகை மகள் இதழில் மலர்ந்த பதிவர்கள்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
வெவ்வினை எல்லாம் வேரருக்கும் விநாயகனை வழிபட்டு வணங்குகிறேன். இரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்!)
குறுஞ்செய்தி: வாழ்த்துக்கள், தங்கள் பேட்டியும், படமும் செப்டம்பர் மாத “மல்லிகை மகள்” இதழில் கலர்ஃபுல்லா வந்திருக்கு.
Labels:
அபாயங்கள்,
உணவில் கலர்,
பேட்டி,
மல்லிகை மகள்
Wednesday 31 August, 2011
ஈகைத்திருநாள் வாழ்த்து.
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்
இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
சங்கரலிங்கம்
காந்திமதி சங்கரலிங்கம்.
இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
சங்கரலிங்கம்
காந்திமதி சங்கரலிங்கம்.
Labels:
ஈகைத்திருநாள்,
ரம்ஜான்
Monday 29 August, 2011
யார் அந்த புண்ணியவான்? எச்சரிக்கைப் பதிவு.
எனது குடும்ப சூழல் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாகவே, நான் பதிவுலகம் பக்கம் சரியாக வரமுடியாமல் இருக்கிறேன். மிக அரிதாகவே, ஆன்லைனில் வர முடிகிறது. இந்த நிலையில், அதையும் கெடுக்க,யாரோ ஒரு புண்ணியவான், எனது yahoo மெயில் ஐ.டி.யை ஹாக் பண்ணி, அருவருப்பான ஸ்பேம் மெயில்களை என் பெயரில் அனுப்பி வருகின்றார்.
Labels:
மெயில் ஐ.டி. ஹாக்,
ஸ்பாம்
Thursday 25 August, 2011
Wednesday 17 August, 2011
குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.
PEDICON-2011ல் குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்த உரை. |
தமிழகத்திலுள்ள குழந்தைகள் நல மருத்துவர்களின் 36 வது வருட மாநில மாநாடு TAMIRABARANI PEDICON-2011, நெல்லையில், 12.08.2011 முதல் 14.08.2011 முடிய மூன்று தினங்கள் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
Labels:
PEDICON-2011,
உரை,
குழந்தைகள் நல மருத்துவர் மாநாடு
Saturday 13 August, 2011
பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.
Labels:
Hunt for Hint,
டெரர் கும்மி,
பதிவுலகம்,
புதிர் போட்டி,
வாழ்த்து.
Friday 12 August, 2011
பெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.
அன்பு நெஞ்சங்களே, பதிவுலகில் இது என் முதல் படி. ஏற்றி விடுவதும், இறக்கி விடுவதும் ”உணவு உலகம்” ரசிகர்கள் கைகளில்!
பெண்ணென்றால் பேயும் இறங்குமென்பர். ஆனால், பெண்சிசுக்களைக் கொல்லும் சில பேய்களும் இருக்கத்தான் செய்கிறதென்றால், நம்ப முடிகிறதா? ஆம், பெண் சிசுக்களை கொல்லும், மனிதப் பேய்கள் அவை. சொல்வது உலக சுகாதார நிறுவனம் என்றால் ஜீரணிக்க சற்றே சிரமமாகத்தான் இருக்கிறது.
Labels:
அவலம்.,
பெண் சிசுக்கொலை
Monday 8 August, 2011
இளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு
டிஸ்கி-1: பதிவர் சந்திப்பு என்று சொன்னால்,நெல்லையில் எத்தனை பதிவர் சந்திப்பு என்றே, படையெடுத்து எங்களை உதைக்க வருது ஒரு கூட்டம் என்பதால், இளம் இயக்குனர் சந்திப்பு என்று வைத்தேன் தலைப்பு.
Sunday 7 August, 2011
Friday 5 August, 2011
பசித்திருப்போரைப் புசிக்க வைத்திடு!
கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா மையம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ இல்லையோ, அழைத்து வந்து விட்டுச் செல்லப்படும் முதியவர்கள், மன நோயாளிகள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரிப்பது மட்டும் அன்றாடம் நடக்கும் கொடுமை. அப்படி விடப்படுபவர்கள் வெயிலிலும், மழையிலும், கடும் பனியிலும் படுவது காணாதென்று, பசியின் கொடுமையால், பிச்சை எடுத்துத் திரிவது கொடுமையிலும் கொடுமை.
Labels:
கட்டுரை,
கன்னியாகுமரி,
திருவாவடுதுறை ஆதீனம்,
பசி,
பசித்தவனுக்கு உணவு
Monday 1 August, 2011
மட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட!
கடந்த வாரத்தின் கடைசி நாள். மாலை வேளையில் ஒரு மகிழ்ச்சி தரும் விழா. வந்து கலந்திட வேண்டுமென்று, வாஞ்சையுடன் அழைத்த இரு இளம் உள்ளங்கள். என்ன நிகழ்ச்சியென்று கேட்டதற்கு, ”மனம் மகிழ்ச்சியாய் இருந்திட-கனவுகள் மெய்ப்பட” என்று மட்டும் சொன்னனர். மறக்காமல்,மனதோடு மட்டும் சகோதரி கௌசல்யாவிற்கும் தகவல் சொன்னேன்.தனது மன்னவனோடு வந்திருந்தார்.
Labels:
இளைஞன்,
கட்டுரை,
சாதனை,
சுழற்கழகம்,
மகிழ்ச்சி,
மனம்,
மனம் மலருதல்
Saturday 30 July, 2011
இந்தியாவில் தீவிரமடையும் உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கம்.
உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை முற்றிலும் ஒழித்திட, மத்திய
மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 05.08.2011ல்,
இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வருகிறது. அன்று,
இந்தியா முழுவதிலுமுள்ள உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக
அறிவிக்கப்படுவார்கள்.
உணவு மற்றும் மருந்து கட்டுபாடு ஆகிய
இரு முக்கிய துறைகள் உணவு பாதுகாப்பு ஆணையரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, சில
உணவு பொருட்களை, மருந்துப் பொருட்களென்றும், சில மருந்து பொருட்களை, உணவு
பொருள் என்றும் எண்ணி, இரு துறை சார்ந்த அலுவலர்களும்(உணவு ஆய்வாளர் &
மருந்து ஆய்வாளர்), தத்தம் துறை சாராதது என்றெண்ணி விட்டு வைத்த
பொருள்களும், கலப்படத்தை ஆய்வு செய்வதிலிருந்து இனி தப்பாது.
Labels:
உணவு பாதுகாப்பு
Thursday 28 July, 2011
முதல் போட்டு வாங்கின மோட்டார் சைக்கிளா? அப்ப படிங்க!
திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் திரு.சங்கரநாராயணன். இவரது கண்டுபிடிப்பு ஒன்று, திருவில்லிபுத்தூரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆம், மோட்டார் வாகனக்களுக்கு, செக்யூரிட்டி வெஹிகிள் ஸ்டார்ட்டரைக் கண்டுபிடித்துள்ளார். உணவு உலகம்
Monday 25 July, 2011
Thursday 21 July, 2011
தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
தரம் கெட்ட தண்ணீரை நிதம் வழங்கும் வேன்கள்.
தரம் கெட்ட தண்ணீரை நிதம் வழங்கும் வேன்கள்.
ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள் கரைந்திருக்கும் மண் படிவங்கள்&மனிதக் கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள். இவை தவிர, மண்ணிலுள்ள தாதுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும். அவை தண்ணீருக்குச் சுவையளிக்கும். இந்நீரை அப்படியே பருகினால் நீரினால் பரவும் நோய்கள் நம்மைத் தாக்கும்.
Labels:
பதிவர் சந்திப்பு,
ரயில் பயணம்.
Tuesday 19 July, 2011
மகளுக்கு பத்து மாமரம்.
பெண் குழந்தைகள் பிறந்தாலே, அது சாபமெனக் கருதி,
சட்டென்று அந்த உயிரைக் கொன்றுவிடும் சண்டாளர்கள் மத்தியில், வரமென்று
வாழ்த்தி வரவேற்கவும், வாரி அணைக்கவும்,இந்திய நாட்டிலும் ஓர் கிராமம்
இருக்கிறதென்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
Sunday 17 July, 2011
ஏற்றமிகு இரண்டாமாண்டில் எமது சிபி!
’அட்ரா சக்கை’ அதிபனே,
அட்டகாச சைட்களின் அரசனே!
’எட்றா அந்த அருவாளை’
என்ற மனோவின் நேசனே!
லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு
எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,
எட்டாத ‘கனி’க்கெல்லாம் ஆசைப்பட்டாய்!
திருப்பதி உண்டியல் நோட்டுக்கள் போல்
தினம் உன் பதிவிலே ஓட்டுக்கள்,எனினும்,
திருப்தி இன்றி தினம் மூன்று பதிவிட்டாய்!
தி(க)ட்டத் தி(க)ட்ட, பதிவர் சந்திப்பில் பேசிவிட்டாய்!
இண்ட்லி, தமிழ்-10 , தலை மறைவான தமிழ்மணத்திலும்
இருக்கின்ற போட்டிகளுக்கு நடுவில்
அலெக்ஸா ரேங்கிங் எனக்கு ஆசையென்று
அல்லும் பகலும் அரும்பாடு படுவாய்
கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!
உற்ற நண்பர் குழாம் உனக்கதிகம்!
உரலுக்கு ஒரு புறமென்றால்,
உடுக்கைக்கு இருபுறமும் அடி,
உனக்கோ செல்லும் இடமெல்லாம் அடி!
உதறித்தள்ளிவிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய்
பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்
பேசும்போதோ பெண்கள் என் தெய்வம் என்பாய்!
திருந்த மனமின்றி, பதிவர் சந்திப்பில், பல
திட்டுக்கள் பெற்றாய், இருந்தும்
மலர்ந்த உன் முகம் கண்டு பதிவுலகம் உன்
மனதைப் படித்தது, மலரைச் சொரிந்தது!
கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.
’விருந்தாளி’யில் தொடங்கியது உன் விறுவிறு விமரிசங்கள்,
சினிப்பிரியன் என்றொரு தளம், சினிமாவின் மீதொரு கரிசனம்.
தொடங்கிய ஆண்டில், பதிவுகள், இருநூறைத் தொட்டன
தொடர்ந்த ஆண்டில் நானூறைத் தாண்டி விட்டன!
தலைப்பு வைப்பதில் தன்னிகரில்லாத் தலைவன்,
தனித்தே ரசிப்பது, வெள்ளிகிழமை விடிகாலைப் படங்கள்!
நினைவாற்றலில் நீ தனித்து நின்றாய்,
நிச்சயம் நீ ஜெயித்திடுவாய்!
இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்தாய்,
இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.
Labels:
அட்ராசக்கை.,
இரண்டாமாண்டு வாழ்த்து,
கவிதை,
வாழ்த்து
Wednesday 13 July, 2011
திருநெல்வேலியில் தேர்த்திருவிழா.
நெல்லையப்பர் தேர். |
திக்கெட்டும் புகழ் பரவும் திருநெல்வேலி சீமையிலே, நடந்தது தேர்த்திருவிழா. தமிழகத்தில், பல சிவசபைகள் உண்டு. அவற்றிலே, தாமிரசபை அமைந்துள்ள இடம் திருநெல்வேலி. அன்னை காந்திமதிக்கும், நெல்லையப்பருக்கும் தனித்தனி ஆலயங்கள் எழுப்பப்பட்டு,அவ்விரு ஆலயங்களும், கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாய் பல சிற்பங்கள் உள்ளன. அத்தகைய சிறப்பு மிக்க நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்டம்.
Labels:
ஆன்மீகம்,
தாமிரசபை.,
தேர்த்திருவிழா
Tuesday 12 July, 2011
உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே!
பழம்:நம்மில்பலர், உணவருந்தியதும், வாழைப்பழங்கள் உண்பதை, வழக்கமாக்கி வைத்துள்ளோம். அது பற்றிய சிறு தகவல் ஒன்று. பழங்கள் உடல் நலனிற்கு உகந்தவைதான். ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொருத்து, அவை நம் உடல் நலனிற்கு உற்ற துணையாவதும், ஊறு விளைவிப்பதும் நடைபெறும்.
Saturday 9 July, 2011
பிறந்த நாள் வாழ்த்து.
பதிவர் ’ எறும்பு’ ராஜகோபாலுக்கு இன்று பிறந்த நாள்:
இனியவனே, இன்று உன்னை, உன்
இனிய அன்னை ஈன்றெடுத்த நாள்.
சுறு சுறுப்பாய் இருப்பதற்கென்றே
’எறும்பு’ என்று வலைப்பெயர் வைத்தாய்!
இன்றோ பதிவுலகம் பக்கம் வாராமல்
நன்றாய் ’பஸ்’ விட்டுக் கொண்டிருக்கின்றாய்!
திருமண வாழ்வில் இருமணம் இணைந்த
தருணத்தில் வசந்தங்கள் வரப்பெற்றாய்.
இல்லாளோடும், இனிய குழந்தை ஒன்றும்
இறைவன் வரமெனக் கொடுத்தார்.
இந்த இனிய ’பிறந்த நாளில்’
தந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,
வாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து!
Thursday 7 July, 2011
ஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை!
ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு பயணம் செய்வதென்றால், பணம் இருந்தும், பயணம் செய்திட டிக்கெட் கிடைக்காது திண்டாடும் நம்மில் பலரைப் பார்க்கையில்,பணம் பத்தும் செய்திடும் ( பணம் இருந்தால் மட்டுமே, எல்லாம் முடிந்துவிடும்), என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என்றே எண்ணுகிறேன்.
Monday 4 July, 2011
மதிதா இந்து கல்லூரி பள்ளியில் மனம் மயங்கிய விழா.
நூற்றைம்பதாவது ஆண்டு விழா நுழைவு வாயில். |
நெல்லைக்குப் பெருமை சேர்க்கும், தொல்லைகள் களைய, துயரங்கள் தீர, எல்லையில்லாக் கல்வியை ஊட்டும், ம.தி.தா. இந்து கல்லூரி பள்ளியில், இனிதே நடைபெற்ற நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா கண்டு, என் பள்ளி நாட்களை நினைத்து, மனம் மகிழ்வுற்றது. என் மனம் மகிழ்ந்த நிகழ்ச்சி, உங்களுடன் பகிர்ந்திட:
Friday 1 July, 2011
ATM மெஷின்கள் பயன்படுத்துப்வரா?எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைங்க!
இன்று முதல் வங்கி ATM களில்,அதாங்க தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பரிவர்த்தனை செய்யும்போது கவனமா இருங்க.
Labels:
ATM,
பரிவர்த்தனை கட்டணம்,
வங்கி
Thursday 30 June, 2011
சிரிப்புப் புயல் சித்ரா- கண் கலங்க வைத்த நிமிடங்கள்.
கடந்த ஒரு மாதமாக நெல்லையில் மையம் கொண்டிருந்த சிரிப்புப் புயல்,அமெரிக்காவை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், இன்று தன குடும்பத்துடன்,சித்ரா வானில் பறந்து கொண்டிருக்கிறார்.
நெல்லை பதிவர் சந்திப்பு-தங்கசிவம் அறிமுக உரை.
நண்பர் தங்கசிவம், புதிதாய் பதிவுலகில் காலெடுத்து வைத்துள்ளார். அவர்தம் வலையுலக பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
டிஸ்கி:பதிவர் சந்திப்பு, அறிமுக உரையின் இறுதிப் பகுதி இன்றே வெளியிடப்படும்.
Wednesday 29 June, 2011
பதிவர்கள் சந்திப்பு -காணொளி காட்சிகள்-ஸ்டார் ஜான்,ஜோஸ்பின்,கல்பனா
இங்கு இரண்டு பெண் பிரபலங்கள் மனம் உருகிடப் போகின்றனர். திட மனதுக்காரர்கள் மட்டுமே, பார்த்திட அனுமதி.அடுத்து, ரத்னவேல் அய்யா அவர்தம் மனைவியுடன் வந்திருந்து சிறப்பித்தார். அவர்தம் அறிமுகமும் ஆனந்தமாய் இருக்கும்.
டிஸ்கி: இந்த இரு பிரபல பெண் பதிவர்களும், அரங்கையே அதிர்வலைகளில் உறைய வைத்த உரை விரைவில்.
Tuesday 28 June, 2011
நெல்லை பதிவர் சந்திப்பு -ஷர்புதீன்,ஷங்கர் அறிமுகம்.
நெல்லை பதிவர் சந்திப்பில் ரசிகன் ஷர்புதீன், பலாபட்டறை ஷங்கர், ஜெயவேல் சண்முகவேலாயுதம் மற்றும் அன்புடன் ஞானேந்திரன் ஆகியோர் எப்படி தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்? காணலாமா காணொளியை!
இவர்கள் தமது வலைப்பூ குறித்தும் தாம் எப்படி வலைத்தளம் வந்தோம் என்பது குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் வெளிவரும்.
Monday 27 June, 2011
பதிவர்கள் சந்திப்பு -ஒலி ஒளி காட்சிகள்-என்ன பேசினார்கள்?
நெல்லை பதிவர் சந்திப்பில், பதிவுலகில், பல நாட்களாய் இரவு பகல் பார்க்காது விழித்திருந்து, பயணத்தில் இருந்தாலும், நண்பர்களிடம் கடவுசொற்களை அடகு வைத்தாவது பதிவுகள் போட்டு,பரபரப்பை ஏற்படுத்தி வரும் CP (அது COPY&PASTE என்று தவறாக புரிந்து கொண்டால், அது என் தவறல்ல),கோமாளி செல்வா, வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், வலைசரம் பொறுப்பாசிரியர் சீனா அய்யா மற்றும் கருவாலி ராமலிங்கம் ஆகியோரின் அறிமுக உரை:
டிஸ்கி-1: வீடியோவின் தொடக்கத்தில், சிபி கஷ்டப்பட்டு நிமிர்வது, வீட்டில் பெற்ற அடியினால் என்று எவரேனும் சிந்தித்தால் அதற்கு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், பொறுப்பல்ல!
டிஸ்கி-2: சிபி, பெண் பதிவர்களிடம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு விரைவில்!
Labels:
ஒலி ஒளி காட்சிகள்
Saturday 25 June, 2011
பதிவர் சந்திப்பு-சமூக சேவையொன்றை சற்றே சிந்திப்போமா!
வரவேற்புரை:சங்கரலிங்கம். |
பதிவர்கள் சந்திப்பு குறித்து நம் பதிவுலக சகோதர சகோதரிகள், பல பதிவுகளை போட்டு, சந்திப்பு தித்தித்த விதம் குறித்து விளக்கி வருவதால், முக்கிய நிகழ்வுகளை மட்டும் நானிங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
Sunday 19 June, 2011
பதிவர்கள் சந்திப்பு பல்சுவை சிந்திப்பு நன்றி அறிவிப்பு
நாடு, மொழி , மதம், இனங்களைக் கடந்து, நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒரே ஒரு குடையின் கீழ், ஒன்றாய் இணைந்திட, 17.06.2011 இல் நெல்லையில், சந்தித்திட சிந்தித்தோம். சிந்தனை செயலாய் உருவானது.
Labels:
சமூக சேவை,
நன்றி,
நெல்லை பதிவர் சந்திப்பு
Monday 13 June, 2011
பதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்!
பதிவிடுதல்,பதிவுகளைப் படித்தல், பின்னூட்டம் இடுதல், பிடித்தால் ஓட்டும் இடுதல் என்றிருந்த நாம், நெல்லையில் ஒரு நாள், நம் பதிவுலக சொந்தங்களை நேரில் கண்டு, நம் நெஞ்சார்ந்த நட்புகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று வந்த எண்ணங்களின் வடிவமே, நெல்லையில், 17.06.2011இல், பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கான அடித்தளம் அமைத்தது.
Sunday 12 June, 2011
எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா!
நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து, சிபி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி
சிபி: பண்ணையக்காரருக்கு வணக்கமுங்கோ!
(ஏன் என்று தெரிய வேண்டுமா? பாருங்கள் சிபி பக்கங்கள் டிஸ்கியை !
சிபி: பண்ணையக்காரருக்கு வணக்கமுங்கோ!
(ஏன் என்று தெரிய வேண்டுமா? பாருங்கள் சிபி பக்கங்கள் டிஸ்கியை !
உணவு: ஆடு மேய்க்க ஆளு தேவைன்னு விளம்பரம் கொடுத்தா, என் கணக்கபிள்ளையை காண்டாக்ட் பண்ணுங்கப்பா!
சிபி: பயப்படாதீங்க, எல்லாம் ஜஸ்ட் காமெடிக்கு!
(பயபுள்ள, எப்படி ஜகா வாங்குராருப்பா!)
டிஸ்கி-1: மேலே படத்தில் ஆடு மேய்ப்பது அண்ணன் சிபி இல்லீங்கோ!
டிஸ்கி-2 : எங்க போனாலும், உதை வாங்காம போகுறது இல்லையென்பது , சிபியின் வழக்கமா போச்சுப்பா!
Labels:
மொக்கை-குறுஞ்செய்தி-நட்பு
Wednesday 8 June, 2011
Monday 6 June, 2011
Thursday 2 June, 2011
Monday 30 May, 2011
Thursday 26 May, 2011
கற்றல் இனிமை-கற்பித்தல் அதனினும் இனிமை!
கோவை SRKV கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி. |
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தா பவ்யமா உட்கார்ந்து கேட்பாங்க. நீதிமன்றங்களில் வாதாடும் வக்கீல்களுக்கும், பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்திட அழைக்கப்பட்டேன்.எப்படி இருந்தது என் அனுபவங்கள்? பார்க்கலாம்.
Monday 23 May, 2011
நடை மேடைகள் நடப்பதற்கு அல்ல!
பஸ் என்றால் படிக்கட்டில் பயணமும் , ரயில் என்றால், வாசல் அருகே வந்தமர்வதும் நம் வாடிக்கை. இப்படி எதிலும் எங்கும் வித்தியாசங்களையே விரும்பும் நாம், நடைமேடையில், நடப்பதில்லை. ஏன், அங்குதான் கடை இருக்கும், 'கல்லா' இருக்கும், கக்கா போவாங்க, நம் வாகனங்கள் நமக்காக அங்கே காத்திருக்கும்.
Friday 20 May, 2011
நாலு இன்ஜினியரிங் மாணவர்களின் நச்சென்ற ஒரு கண்டுபிடிப்பு.
காருன்னா பெட்ரோல்ல ஓடும் டீசல்ல ஓடும். காற்றுல ஓடும்னு கேள்விப்பட்டிருக்கேளோ! கலி முத்திடுத்து! - இன்று காலை நான் கேட்ட ஒரு வசனம்.
Monday 16 May, 2011
Wednesday 11 May, 2011
வாட்டர் கேன்களும் வாட்டும் நோய்களும்-அதிர்ச்சி தகவல்கள்.
கத்திரி வெயில் உச்சியை பொளக்குது. கண்ட கண்ட தண்ணீர் எல்லாம் குடிச்சி, தொண்டை கரகரங்குது. காரணம்தான் தெரியாம, காச அள்ளி வீசறோம். காசுக்கேத்த தரம் தண்ணீரில் இருக்கா, தேடுறோம்! காசு கொடுத்து வாங்கி பருகும் தண்ணீரினால் பரவும் நோய்கள்- அதிர்ச்சி தகவல்கள்.
Monday 9 May, 2011
Sunday 8 May, 2011
கவிதை- அன்னையர் தினம்.
ஈரைந்து மாதங்கள் என்னை நீ சுமந்தாய் அன்னையே,
இன்றைக்கும் உன் மடிதான் சொர்க்கம் இம்மனுலகிலே!
உன் உயிரை ஊணாக்கி ஊட்டி என் உடலை வளர்த்தாய்,
உலகையே தந்தாலும் உன் அன்பிற்கு அது ஈடாகுமோ!
நடை பயில, நல்லவை நான் அறிய கற்றுக் கொடுத்தாய்,
நானிந்த உலகிலே நல் மனிதனாய் வாழ வழியமைத்தாய்! அன்னையர் தினத்தில் என் சிறு அன்பு காணிக்கை தாயே!
Labels:
கவிதை- அன்னையர் தினம்.
Thursday 5 May, 2011
இதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக?
இலவசம், இலவசம், இலவசம். இப்படி கொடுத்து கொடுத்து, எதற்கெடுத்தாலும் இலவசம் கேட்டும் ,கொடுத்தும் பழகிட்டோம்.
Labels:
கட்டுரைகள்-மீனு மீன்-கலப்படம்
Monday 2 May, 2011
Subscribe to:
Posts (Atom)