இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 31 May, 2010

காயம் காக்கும் பெருங்காயம்.

                               காயம் காக்கும் பெருங்காயம்.


        ஈரான், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் (பெஷாவர்),துருக்கி  போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில், காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும், ஃபெருல்லா (FERULA ALLIACES, FERULA RURICAULIS)எனும் சிறு மரத்திலிருந்து வெள்ளை, கருப்பு,கருஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கும் பிசினிலிருந்து தயாரிக்கப்படுகிறது காயம். 

        தண்ணீரில் கரைத்தால், பால் நிறமாகும் என்பதால், பால் காயம் என்றோர்  பெயரும் இதற்கு உண்டு. காரமான சுவையும் வீரியமும் காயத்தின் குணம். காயம் எளிதில் செரிப்பதுடன், உடனிருக்கும் உணவையும் எளிதில் செரிக்கச்செய்யும். பசியைத்தூண்டும். வயிறும் குடலும் சுறுசுறுப்பாய் வேலை செய்வதால், வாயுக்களை குடலில் தங்க விடாது. வயிற்று வலி, உப்புசம் வந்த வழியே திரும்பிப்போகும்.
        வாயுக்கள் வயிற்றிலிருந்து வெளியேறுவதால், இதயமும், நுரையீரலும் நன்றாய்ச் சுருங்கி விரிந்து இதமாய்ச் செயல்படும். 
நாக்கில் சுவைத்தால், உரைக்கும். இதில், ஆறிலிருந்து இருபது சதவிகிதம் ஆவியாகும் எண்ணெயிருப்பதால், பெருங்காயத்தைத் தீயில் சுட்டால், முழுவதும் கற்பூரம்போல் எரிந்து விடும். எனினும், இதனை அப்படியே பயன்படுத்துவதைவிட, எண்ணெயில் பொரித்து பயன்படுத்துதல் சாலச்சிறந்தது.
        கருப்பையைக் காக்கும் இந்த காயமென்பதால், பிரசவித்த தாய்மார்க்கு, காயத்தைப் பொரித்து, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் சேர்த்துக் கொடுப்பது அருமருந்தாகும்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 30 May, 2010

இரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.

                 இரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.





        வஞ்சன மீன், பசலைக்கீரை, கொழுப்பு நீக்கிய புளிப்பில்லாத் தயிர், பீன்ஸ்- இரவு உணவில் இவற்றைச் சேர்த்தால், இனிய தூக்கம் வருமாம்.
        மெலடோனின் எனும் ஹார்மோன் தூக்கம் தொடர துணை புரிகிறது. வஞ்சன மீனிலிலுள்ள (டி.எச்.ஏ) கொழுப்பு, மெலடோனின் நம் உடலில் சுரக்க உதவுகின்றது.


        கொழுப்பு நீக்கிய புளிப்பில்லாத் தயிரிலிலுள்ள சுண்ணாம்புச்சத்தும், மக்னீசியமும் நாம் விரைவில் ஆழ்ந்து தூங்க உதவுகிறது. இவ்விரு தாதுக்கள் நம் உடலில் குறைந்தால், தூக்கத்தில் சதைப்பிடிப்பும், நிம்மதியற்ற தூக்கம் கிடைக்கவும் வழிவகுக்கின்றது.

 
        அதேபோல், பசலைக்கீரை போன்ற பச்சைக்கீரைகளிலுள்ள இரும்புச்சத்தும், நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவுகின்றது.

 
        தூங்கும்போது நம் உடலும் மனதும் இறுக்கம் தொலைக்கின்றன. செரடோனின் எனும் ஹார்மோன் இதற்கு உதவுகிறது. பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில், விட்டமின்-பி, பி-6 மற்றும் பி-12 அதிகமிருப்பதால், செரடோனின் நம் உடலில் மிதமாய்ச் சுரக்கவும், நாம் நன்றாகத் தூங்கவும், அவை உதவுகின்றன. அண்மைய ஆய்வுகளில், தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு தூக்கம் கிடைக்க, பி-விட்டமின்கள் பெரிதும் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
        எனவே, இரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 26 May, 2010

காபி டீயிலும் கலோரிகள் உண்டு.

காபி டீயிலும் கலோரிகள் உண்டு.


        காலையில் அருந்தும் காபி, டீயிலும் கலோரிகள் உண்டு. கலோரிகள் எத்தனை  காண்போமோ?
     குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு ஸ்பூனும், ஒரே ஒரு டீஸ்பூன் சர்க்கரை 
சேர்க்கப்பட்டால், இன்ஸ்டண்ட் காபியில், 40 கலோரிகள். இருக்கும்.
    குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் அரை ஸ்பூனும், ஒரு டீஸ்பூன் சா;க்கரையும், அரை ஸ்பூன் கிரீமும் சேர்க்கப்பட்டால், எக்ஸ்பிரஸ்ஸோ காபியில், 55 கலோரிகள் இருக்கும்.
    குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு ஸ்பூனும், ஒரே ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கப்பட்ட டீயில் 30 கலோரிகள். மட்டுமே இருக்கும்.
  
50கிராம் மாம்பழத்துடன், 150மிலி பாலும், 2ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து தயாரித்த மாம்பழஷேக்கில், 250 கலோரிகள் இருக்கும். 2ஸ்பூன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மாம்பழச்சாறில், 100 கலோரிகள் இருக்கும். அன்னாசிப்பழச்சாறில், 110 கலோரிகள் இருக்கும். அதுவே, ப்ரெஷ் ஜூஸென்றால்,175 கலோரிகள் இருக்கும்.
    ஒரு கப் எலுமிச்சைப் பழ  ரசத்தில்,40 கலோரிகள் இருக்கும். இளநீரில் 24 கலோரிகள் இருக்கும்.
   
Follow FOODNELLAI on Twitter

Saturday 22 May, 2010

கலப்படம் செய்யப்படும் பொருட்கள்


Follow FOODNELLAI on Twitter

Thursday 20 May, 2010

உறித்த கோழிகள்


                        உறித்த கோழிகள்.

           உறித்த கோழியாய், முடி உதிர்த்து நிற்கும் கோழியைப் பார்த்திருக்கிறீர்களா?
           மனிதனின் பேராசைக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழிகளே அவை.
           கறிக்கோழியை தோலுரித்து, அதன் முடிகளை நீக்குவதே கடினம். இதற்கென மனிதன் மாற்றம் செய்தான், கோழியின் மரபணுவில். கிடைத்தன, உறித்த கோழிகளாய் உலா வரும் மரபணு மாறிய கோழிகள். முடிகள் அதன் உடலில் வளராது. அதனால் சமைப்பது எளிது.
     மனிதா உன் ஆசைக்கு அளவேது?
           கோழியில் கறி அதிகமிருக்க வேண்டும். அதற்கென்றோர் மரபணு மாற்றம். அந்தக் கறியும் மிருதுவாய் இருக்க வேண்டும். மேலும் ஒரு மரபணுமாற்றம். எலும்புகள் பல்லை உடைக்கக்கூடாது. அதற்கும் மரபணுவில் மாற்றம். கோழி வளர்கையில், செயற்கையாய் எலும்பு தேய்வு ஏற்படுத்த ஏற்றிடுவார் மருந்தொன்றை. எலும்பு, கோழியின் உடலில் வளரும். ஆனால், இறுகாது. மென்று தின்றிட, மிருதுவாய் இருந்திடும்.
           வந்து விட்டது கோழி முட்டையிலும் வண்ண நிறங்களின் ஜாலங்கள். மரபணு மாற்றம் செய்து வந்து விட்டது, வண்ண வண்ண முட்டைகள், இப்போது நகரங்களில், எளிதில் பரவிவிடும் சிறு கிராமங்களுக்கும்
           என்ன இவற்றின் பாதிப்புகள்? மரபணு மாற்றத்தால், அதை உண்டு மகிழ்வோரின் மரபணுக்கள் மாற்றமடையும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துவதும், ர்ப்பிணிகளின் ர்ப்பம் அதிகம் கலைவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இத்தகைய உணவுகளை உண்பதாலே!
           பத்திரிக்கைகளில் படித்து அறிந்து பகிர்ந்து கொள்கிறேன் உங்களிடம்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 19 May, 2010

பழச்சாறுகள் பலனளிக்குமா?


     பழச்சாறுகள் பலனளிக்குமா?



           காலை உணவு நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று. நாலு இட்லி, ஒரு வடை இது நாகரீ உலகில் நம் காலை உணவு. நமக்குப்போதுமா இந்த உணவு?
           காலையில் உண்ணும் உணவில் பாதியளவே பிற்பகல் உணவாகவும் அதில் பாதியளவே இரவில் உணவாகவும் உண்ண வேண்டும். இரவில் நாம் தூங்கச்செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் உணவருந்துதல் உடல் நலத்திற்கு நல்லது.
           ஆக காலை உணவை ஒரு கட்டு கட்டுவதில் தவறில்லை. காலையில் உண்ணும் உணவே நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாய் செயல்பட உதவும். கார்ன் பிளேக்ஸூம் கால் லிட்டர் பழச்சாறும் காலை உணவாய் எடுத்துக்கொண்டால் நம் உடலில் கொலஸ்ட்ரால் கூடாதென்றோர் எண்ணம் நமக்குள். கார்ன் பிளேக்ஸைவிட கோதுமை பிளேக்ஸ் கலோரிகள் குறைவாய்க் கொடுக்கும். பழச்சாறுகள் பருகுவதற்குப்பதில் பழமாய்ச் சாப்பிட்டால் பலன் மிகக்கொடுக்கும்.
           ஏனெனில், டின் மற்றும் பாக்கட்களில்  அடைத்து விற்கப்படும் பழச்சாறு பேக்கிங் மீது நோ சுகர் ஆடட் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டு ஏமாற வேண்டாம். பழங்களில் இயற்கையாய் உள்ள ப்ரக்டோஸ்”, இனிப்பின் அளவை ஏராளமாய் ஏற்றிவிடும். ஒரு பாட்டில் பழச்சாறில், ஒரு பாட்டில் கோக் கொடுக்கும் அதே அளவு கலோரிகள் உள்ளது.
     ரெடிமேட் பழச்சாறில், பழச்சாறு பத்து சதவிகிதம் மட்டுமே உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், இயற்கை மற்றும் செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் பிரிஸர்வேட்டிவ்கள் மட்டுமே.
           உடலிற்கு நல்லதென உங்கள் முன் வைக்கப்படுபவை அனைத்தும் கலோரிகள் குறைந்ததல்ல. அதிலும், சாக்கரை வியாதி உள்ளவர்களுக்கு, பழச்சாறுகள் பகையாகும். உடல் எடையைக் குறைக்கப் பாடுபடுபவர்கள், பழச்சாறு பக்கம் பார்ககவே வேண்டாம். இளைஞர்களே! பழச்சாறு மட்டும் அருந்தினால் பலன் மிகக்குறைவு. பழச்சாறு அருந்துவதைவிட பழத்தைச்சுவைத்துச் சாப்பிடுவது பலனளிக்கும்.
          
Follow FOODNELLAI on Twitter

Tuesday 18 May, 2010

காலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்டவர்கள்!

Follow FOODNELLAI on Twitter

Sunday 16 May, 2010

மாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.

மாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.

  

புரதம் நாம் உயிர்  வாழ இன்றிமையாத ஒன்று.
அத்தகைய புரதத்தில்  
உயிரைப் பறிக்கும் நோய்கள் 
உருவாக்கும் புரதமும் உண்டு.
அதன் பெயர் - சி-ரீயாக்டிவ் புரோட்டின். (சுருக்கமாக சி.ஆர்.பி)
சி-ரீயாக்டிவ் புரோட்டின் உடலில் 
அதிகமானால், உடல் எடை அதிகரிப்பு,  
நெஞ்செரிச்சல்  போன்றவை உண்டாகும்.
உடல் எடை பருத்தவர்களின் சி-ரீயாக்டிவ் புரோட்டின் 
அளவைக் குறைப்பதன் மூலம் 
அவர்களுக்கு ஏற்படும் இதய நோய்,பக்கவாதம், 
டயாபடீஸ் போன்ற ஆபத்துக்களிலிருந்து 
அவர்களை காக்கலாம்.
சி-ரீயாக்டிவ்  புரோட்டினின் அளவைக் 
குறைப்பதில் மங்குஸ்தான் பழச்சாறு பெரும் பங்கு வகிக்கிறது.
சி-ரீயாக்டிவ்  புரோட்டின் அளவைக் குறைப்பதன் மூலம்,
உடல் எடையையும் சீராக வைத்திருக்கலாம்.
ஆக, மங்குஸ்தான் பழச்சாறு பருகினால், 
சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும். அதன்மூலம்,  நெஞ்செரிச்சல் , உடல் எடை குறையும்.
நீண்ட ஆயுளும் கைகூடும்.
Follow FOODNELLAI on Twitter

Thursday 13 May, 2010

அதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்(ர்)கள்











 
தோண்ட தோண்ட துயரங்கள்.
மரித்து விட்ட மனிதங்கள்.
லாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு 
காலாவதியான உணவு பொருட்களை, கடுகளவும் விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்திடும் விபரீதங்கள்.

ஆய்வுகள்  மட்டுமல்ல அறிவுரை கூட்டங்களும்தான்!
உணவாக உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மாதாந்திர கூட்டத்தில்,  என்ன செய்ய வேண்டும், எப்படி சுகாதாரம் பேண வேண்டுமென எங்களிடம் கேட்டார்கள். எப்படி சுகாதாரம் பேண வேண்டும் என்றும், என்னவெல்லாம் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும், உணவருந்தும் மக்களுக்கு இன்னல் கொடுக்கும் என்று அதனையும் எடுத்து கூறினோம்(நானும் நண்பர் காளிமுத்தும்). மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்.  மாறட்டும் மனித மனம். மலரட்டும் மனிதம்.

Follow FOODNELLAI on Twitter

Tuesday 11 May, 2010

படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா?


படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா?
   தியேட்டரோ, வீடோ, திரைப்படமோ, திகில் தொடரோ,
   திண்பதற்கு உங்கள் அருகில் பாப்கார்ன் உண்டா?
    பார்த்து சாப்பிடுங்க பாப்கார்னை!
    பக்க விளைவுகள் பக்காவாய் உண்டு!
    பாப்கார்னுடன் ஒரு சாஃப்ட் டிரிங்ஸ்
    பட படவென ஏறிடும் பல்ஸ் ரேட்!
    அதிகமில்லை ஜென்டில்மேன் 1600 கலோரிகள்
    அதிலிருந்து கிடைக்கும் உங்களுக்கே!
    அதைவிடக் கொடுமை 60கிராம் கெட்ட கொழுப்பும்
    இலவச இணைப்பாய் இணைந்து வரும்.
    பாப்கார்ன் பொரிக்கப் பயன்படுத்தும்
    எண்ணெயிலிருந்து எடுத்துக்கொள்ளும் கெட்ட கொழுப்பு.
    பாப்கார்னுடன் பயன்படுத்தும் உப்பிலிருக்கும் 
    சோடியம் இரத்தக் கொதிப்பை ஏற்றிவிடும்.
     இதைவிடக் கொடுமை பாக்கட்டில் குறிப்பிட்டுள்ள
     அளவைவிட கலோரிகள் அதிகமிருக்கும்.
     எனவே, படம் பார்க்கும்போது பாப்கார்ன் 
     கொறிப்பதை  தவிர்த்தல் நலம்.

Follow FOODNELLAI on Twitter

Sunday 9 May, 2010

உணவு கலப்படம் குறித்த உரை.

ஆண்டு தோறும் சென்று வருகிறேன். என்
அறிவில் எட்டியவை பகிர்ந்து வருகிறேன்.
சுவாமிஜி, சுற்றுபுறம், படிப்பதற்கேற்ற சூழ்நிலை, 
கல்லுரி முதல்வர் திரு. முத்தையா  அவர்கள் முதல் 
முனைவர் சுப்ரமணியன்,நண்பர் பிரபு வரை காட்டும் அக்கறை, 
நிச்சயம் - அங்கு படிப்பவர் பல படி முன்னேற பலனளிக்கும்.
Follow FOODNELLAI on Twitter

சுகாதாரமற்ற கடைகள்! சூறாவளி நடவடிக்கைகள்

  சுகாதாரமற்ற கடைகள்! சூறாவளி நடவடிக்கைகள்

Follow FOODNELLAI on Twitter

ஐஸ்கிரிம் சாப்பிட ஆசையா?

ஐஸ்கிரிம் சாப்பிட ஆசையா?

ஐந்து வயதுக் குழந்தையானாலும் 
அது அறுபது வயதுக்குழந்தையானாலும்(!),
ஐஸ்கிரிம் ஆசை மட்டும் அடங்காது.
அன்றாடம் அடிக்கப்படும் மாடுகளில் 

உள்ள சுமார்  200க்கும் மேற்பட்ட எலும்புகளில், 
மிகச்சிறிய எலும்புகள் மட்டுமே இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகின்றன.
அளவில் பெரிய எலும்புகள் எல்லாம் 

அரைக்கப்பட்டு, ஜெலட்டினாக மாற்றப்பட்டு 
ஐஸ்கிரிமுடன் ஐக்கியமாகின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படும் ஜெலட்டினில் புரதமும்,

கால்சியமும் மிகுதியாய்க் காணப்படுகின்றன.
ஐஸ்கிரிம் முதல் சாக்லேட், கேக், ஜெல் வகை உணவுகள் வரை 

இந்த மாட்டு எலும்பிலிருந்து தயாராகும் ஜெலட்டின் இடம் பெறுகிறது.
இத்தகைய ஜெலட்டினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளிலிருந்து தொற்றுநோய்கள் நம்மை பற்றிக்கொள்ளும். கவனம்.
இப்ப சொல்லுங்க ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா?
Follow FOODNELLAI on Twitter

Thursday 6 May, 2010

கவலை தீர கடலை போடுங்க!

கவலை தீர கடலை போடுங்க!


        அடிக்கடி பயணப்படுபவரா? பயணக்களைப்பு     தெரியாமல் இருக்கவும், அலுப்பு தட்டாமல் இருக்கவும் அப்பப்ப பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றைச் சுவைக்கலாம்.
         பஸ்ஸில் பயணிக்கும்போது சிலருக்கு வாந்தி வரும். அத்தகையவர்கள், ஜன்னலோரம் கதவைத் திறந்து வைத்து பயணித்தல் பலன் தரும். அதே போல், இஞ்சியும் இதம் தரும்.
        இஞ்சி மிட்டாய், இஞ்சித்துண்டு போன்றவை பயணத்தின்போது பலன் மிகக் கொடுக்கும். இஞ்சியுடன் கூடிய தேநீர்  இனிமை தரும்.
        வாந்தி வந்து அவதிப்படுபவர்கள், முக்கால் வயிற்றுக்கு மட்டுமே உணவு உண்ணவேண்டும்.
        பயணத்தின்போது, சிறிதளவில் பாதாம், பிஸ்தா, முந்திரி  போன்றவை எடுத்துச்சென்று திண்பது பயணக்களைப்பையும், பசியையும் போக்கும்.
        பஸ்ஸின் பின்புறம் பயணிக்கும்போது அதிக அளவில் குலுங்கும். எனவே, பஸ்ஸின் முன் பாதியில் பயணிப்பது வாந்தி வருவதைக் குறைக்கும்.
        பஸ்ஸில் பயணிக்கும்போது, காலியாக உள்ள வயிற்றைக்காக்க, கடலை போடுங்க!
Follow FOODNELLAI on Twitter