20.05.2012ல், சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அன்று சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு, அதில் இளம் சாதனையாளர் விசாலினி-இந்தியாவின் விடிவெள்ளி மற்றும் இயற்கை ஆர்வலர் திரு.யோகனாதன் ஆகியோரை பதிவர்கள் கௌரவப்படுத்தியது உட்பட நிகழ்ச்சியின் தொகுப்பு,டெல்லியிலிருந்து வெளியாகும் “THE FORECAST FRONT" ஆங்கில இதழின் ஜூன் -2012 பதிப்பில் செய்தியாக வந்துள்ளது. அதில் கலந்து கொண்ட பதிவர்கள் பெயருடன், அவர்களது வலைப்பூ முகவரியும் கொடுத்துள்ளது மிகச்சிறப்பு. பங்கு பெற்ற அனைவரது பெயரையும் போட அவருக்கு மிகுந்த ஆசையிருந்தும், இடத்தின் அருமை கருதி, சில பெயர்களை மட்டுமே போட முடிந்தது என்று சொன்னார்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Saturday 30 June, 2012
Tuesday 26 June, 2012
திருமலை-திருப்பதி-திருத்தணி திகட்டாத அனுபவங்கள்.
சென்ற வார இறுதி. சென்னை சென்று திருப்பதி செல்ல திட்டமிட்டோம். எங்களுடன், புது மணத்தம்பதியினரான என் மகளையும், மருமகனையும் அழைத்துச்செல்லத்தீர்மானித்தோம். விடுமுறை நாளென்றால், வசதியாயிருக்குமென்று, சனிக்கிழமை திருப்பதி சென்று தங்குவதென்றும், ஞாயிறு அதிகாலை திருமலைவாசனை தரிசிப்பதென்றும் முடிவெடுத்தோம்.
Labels:
ஊர் சுற்றலாம் வாங்க,
திருத்தணி,
திருப்பதி,
திருமலை,
மாம்பழ உலகம்
Thursday 21 June, 2012
வகையாய் மாட்டிவிட்ட வள்ளி
கடந்த வருடம், மாதாந்திர ஆய்வின்போது,ஒரு லாலாக்கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த சிப்ஸ் பாக்கட், பார்க்க கவர்ச்சியா இருந்தது.அதுல ஒரு சிப்ஸ் பாக்கட்டை உணவு மாதிரியாக எடுத்து அனுப்பினா, அந்த சிப்ஸ் அட்ராக்சனா இருக்க, அதில் செயற்கை வண்ணங்கள் சேர்த்திருக்கிறதும்,அந்த பாக்கட்டுகள் மீது, உணவு கலப்படத்தடைச்சட்டத்தின் கீழ் குறிப்பிட வேண்டிய தயாரிப்பு தேதி, பாட்ச் எண், சிப்ஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் இல்லையென்பதும் தெரிய வந்தது.
Labels:
உணவில் கலப்படம்,
தண்டனை,
வழக்கு
Tuesday 12 June, 2012
உணவுப்பாதுகாப்பு-நுகர்வோர் கவனத்திற்கு.பாகம்-2
டிஸ்கி: 25.04.2012 அன்று நடைபெற்ற என் அன்பு மகள் திருமண விழாவில், பதிவுலக சொந்தங்கள் பலரும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர். நேரில் வரமுடியாத நம் பதிவுலக சொந்தங்கள் பலர், நெஞ்சார வாழ்த்தியிருந்தனர். வியட்நாமிலிருந்து, விக்கி பறந்து வந்து, வாழ்த்திச் சென்றார்.மும்பையிலிருந்த நாஞ்சில் மனோ, குடும்பத்துடன் வந்து சென்றார்.
Labels:
உணவு பாதுகாப்பு,
ஊர்வன,
பறப்பன
Subscribe to:
Posts (Atom)