உண்ணும் உணவிலும், பருகும் தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு அறிகுறி. இதுவும் அத்தகையதோர் நிகழ்வுதான்:
தமிழகத்தில்
857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான
நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. மக்களுக்கு தரமற்ற குடிநீர்
வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில்
கொண்டு கடந்த மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை
தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.
