இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 28 December, 2015

காலாவதியாகும் தேதி கட்டாயம்

                     
உணவுப்பொருள் பாக்கட்கள் மீது, இனி காலாவதியாகும் தேதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுமென மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 3 November, 2015

இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி -இன்றளவில் ஏற்படுத்தியுள்ள சாதனைகள்-3


                        

முதல் பகுதி வாசிக்க: 
இரண்டாம் பகுதி வாசிக்க:
Follow FOODNELLAI on Twitter

Saturday 24 October, 2015

இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி -இன்றளவில் ஏற்படுத்தியுள்ள சாதனைகள்-2



இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி பற்றி கடந்த 2012 ஜனவரி முதல் தேதியன்று  நான் வெளியிட்ட கட்டுரை இன்றும் Facebook , Whatsapp ல் வலம் வருவது மிக்க மகிழ்ச்சி. பல இடங்களில் படைத்தவர் பெயரில்லாமலேயே வருகின்றது என்று ஒரு சிறு ஆதங்கம் மட்டும் என்னில் உண்டு. ஆனால், ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்து விட்டு  சத்தமே இல்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி வியப்பின் சிகரம் தான், அந்த வலிகளை மறக்கச் செய்கின்றது.  
ஆம் !  வெல்டர்  பேத்தி  World Record Holder  ஆன கதை இது
Follow FOODNELLAI on Twitter

Wednesday 30 September, 2015

எச்சரிக்கையா இருங்க!

எச்சரிக்கை! சமையல் எண்ணெய் வாங்கும் போது
உங்கள் கண்ணே உங்களை ஏமாற்றும்......!
சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மேல் உள்ள
படத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்...!
Follow FOODNELLAI on Twitter

Friday 4 September, 2015

இந்திய பிரதமருடன் உரையாடிய இளம்பெண்.


விசாலினியுடன் நான்
                           கடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் ஒருநாள், என் வேலை விஷயமாக நான் பணிபுரியும் பகுதியில் ஆய்விற்கு சென்றபோது என்று எண்ணுகின்றேன். வயதான ஒரு அம்மா, சிற்றுண்டி விடுதியில், தன் கையில் ஒரு மஞ்சப்பையில் பல சான்று நகல்களை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவரிடம், என் பேத்தி, இத்தனை சாதனைகள் படைத்திருக்கின்றாள், ஆனாலும் இந்த சமூகம்  அங்கீகரிக்க மாட்டேன் என்கிறதே! என்ன உலகமடா இது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.         
Follow FOODNELLAI on Twitter

Monday 24 August, 2015

ஷீரடி,சனிஷிக்னாபூர், புனே, தோரணமலை ஆன்மீகப்பயணங்கள்.

                         

                                                                   ஓம் சாய்ராம்.
                             கடந்த வருடமே செல்ல எண்ணி, கடந்த வாரம், ஷீரடி செல்ல வேண்டுமென நண்பர்கள் குழாமுடன் புறப்பட்டேன். நெல்லையிலிருந்து முதல்நாள் சென்னை நோக்கிய பயணம். அடுத்தநாள் பகல் முழுவதும், சென்னையில் போக்குவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.
Follow FOODNELLAI on Twitter

Thursday 6 August, 2015

மீண்டும் ஒரு கால அவகாசம்.

                   உணவுப்பொருள் வணிகர்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்காக பல்வேறு அரசுத்துறைகளிடமிருந்து பெற்றுள்ள உரிமங்களை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழான உரிமமாக மாற்றிக்கொள்ள,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைவனம்(FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA), 04.08.2015 வரை அளித்திருந்த கால அவகாசத்தை, இன்று  06.08.2015ல் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவின் வாயிலாக, 04.02.2016 வரை நீட்டித்துள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 5 August, 2015

மதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி!

         

        நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பயணம். எனக்கு ஒரு கோச்சில் கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எப்போதாவது கீழ் இருக்கை கிடைக்கும். தப்பித்தவறி கிடைக்கும்போதும், அதில் நாம் பயணம் செய்யமுடியாமல், வயதானவரோ, கர்ப்பிணிப்பெண்ணோ, கைக்குழந்தையுடன் வரும் தாயாகவோ வருபவருக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கும். அதை நாம் பெற்றுக்கொண்டு, கீழ் இருக்கையை அவர்களுக்கு விட்டுத்தருவது வாடிக்கை.
Follow FOODNELLAI on Twitter

Monday 20 July, 2015

அந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.



நேற்று மாலை நாங்குநேரி நோக்கி ஒரு பயணம். அந்தி சாயும் வேளையில்,  = வானமாமலை பெருமாளை தரிசிக்க நானும், நண்பர் ரமேஷும், அவர் உறவினர் ஒருவருமாய் புறப்பட்டுச் சென்றோம்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 7 July, 2015

உணவு கலப்படம்-உயர் சிந்தனைகள் உயிர்பெறும் நேரம்


உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன் றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 17 June, 2015

பாவம் பச்சைக்குழந்தைகளடா!




நூடுல்ஸைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர்  ஒன்று.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 10 June, 2015

இது உங்களுக்கு உதவும்.


Follow FOODNELLAI on Twitter

Tuesday 9 June, 2015

நன்றி-உணவு உலகம் ஒரு லட்சம் பார்வைகள்


நன்றி-இன்று உணவு உலகம ஒரு லட்சம் ஹிட்ஸ் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
எனை இந்த பாதைக்கு அழைத்து வந்த நட்பூக்களுக்கும், உலகறியச்செய்த சக பதிவர்களுக்கும், குறிப்பாக இதயத்தில் (வலைப்பூவின் ஓரத்தில்) இடமளித்த  பதிவுலக ஜாம்பவான்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி. 
Follow FOODNELLAI on Twitter

Saturday 16 May, 2015

வழக்கு வாய்தா தண்டனை


1993ல் தொடரப்பட்ட ஓர் உணவு கலப்பட வழக்கு. உணவு மாதிரி எடுத்தவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.  நான் மாநகராட்சிப்பணிக்கு வந்தே 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. வாரம் தவறாமல் வாய்தாவிற்கு சென்று, எதிரிகள் ஆஜராகாதபோது, வாரண்ட் பெற்று, வரவழைத்து, வழக்கு நடத்தி, நேற்று முன் தினம், குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர்  மட்டும் குற்றத்தை ஒத்துக்கொண்டதால், நீதிமன்றம் கலையும்வரை சிறைத்தண்டனையும், ரூபாய் ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.
Follow FOODNELLAI on Twitter

Thursday 30 April, 2015

கூகுள்நிறுவனத்தின்சர்வதேசஉச்சிமாநாட்டில் நெல்லைபள்ளிமாணவிசிறப்புரை

           

             கூகுள்நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு வரும்மேமாதம் 2ம்தேதி, சனிக்கிழமை டெல்லியில் நடைபெறஉள்ளதுஇந்த உச்சிமாநாட்டில்உலகசாதனைகள் படைத்தபாளையங்கோட்டை IIPEலட்சுமிராமன்மெட்ரிக் பள்ளியின்   9ம்வகுப்புமாணவி   
K.விசாலினி  (வயது 14),  சிறப்புரைஆற்றஉள்ளார்.
Follow FOODNELLAI on Twitter

Monday 6 April, 2015

உலக சுகாதார தினம்-உணவு பாதுகாப்பே உன்னத லட்சியம்.


இந்த ஆண்டு, உலக சுகாதார தினத்தின் (07.04.2015), உன்னத லட்சியமாய்  பாதுகாப்பான உணவு நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம்  உறுதி ஏற்கின்றது.
Follow FOODNELLAI on Twitter

Sunday 22 March, 2015

பகிர்ந்ததில் பிடித்தது

சமீபத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்ததில் பிடித்தது:
மதுரை 'அப்போலோ மருத்துவமனை’ 'சிறுநீரகவியல்’ தலைமை மருத்துவர் சௌந்தரபாண்டியன் : 
- 'புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள், இந்த ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும்தான். இதை ஏராளமான ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன. இப்போது நியோநிகோடினாய்ட் (Neonicotinoid) என்ற ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்து, காய்கள் மற்றும் பழங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. காய்கறி, பழங்களைச் சமைப்பதற்கு முன்பு கழுவினாலும், ஏற்கனவே உள்ளே சென்ற ரசாயனம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அல்சைமர், ஞாபகமறதி, குழந்தையின்மை போன்ற பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.

'எல்லாம் சரி, ஆபீஸ் போற அவசரத்துல கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத் தேடி போக முடியலையே'' என அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக் கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ், பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு முறை கழுவ வேண்டும். 
Follow FOODNELLAI on Twitter

Thursday 5 February, 2015

மீண்டும்!

உணவு வணிகர்கள் தம்மிடமுள்ள உரிமங்களை புதுப்பிக்கவும், பிற சட்டங்களின் கீழ் பெறப்பட்ட உரிமங்களை உணவு பாதுகாப்பு சட்ட உரிமங்களாக மாற்றிக்கொள்ளவும், 04.02.2015வரை அளித்த கால அவகாசத்தை, 04.08.2015 வரைஆறு மாத காலம் நீட்டிப்பு செய்து, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் அமைவனம் 04.02.2015ந் தேதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 13 January, 2015

விருதுநகர் மாவட்டத்தில் விறு விறு விழிப்புணர்வு பணிகள்

                   
            சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக டெங்குக்காய்ச்சல் கண்டு, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை பல போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Sunday 4 January, 2015

மிளகாய்த்தூளில் காரம் நல்லதா?


CONCERT  அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர்,  யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்தினர்.  அந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் விளக்கப்பட்ட மிளகாய்த்தூள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு:
Follow FOODNELLAI on Twitter