கடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் ஒருநாள், என் வேலை விஷயமாக நான் பணிபுரியும் பகுதியில் ஆய்விற்கு சென்றபோது என்று எண்ணுகின்றேன். வயதான ஒரு அம்மா, சிற்றுண்டி விடுதியில், தன் கையில் ஒரு மஞ்சப்பையில் பல சான்று நகல்களை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவரிடம், என் பேத்தி, இத்தனை சாதனைகள் படைத்திருக்கின்றாள், ஆனாலும் இந்த சமூகம் அங்கீகரிக்க மாட்டேன் என்கிறதே! என்ன உலகமடா இது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.