உணவுப்பொருள் பாக்கட்கள் மீது, இனி காலாவதியாகும் தேதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுமென மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
உணவுத்துறை இது சம்பந்தமான கூட்டம் ஒன்றை கூட்டி, இறுதி முடிவெடுக்கப்படுமென்றார் அவர். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திரு.ஜெயின் உணவுப் பொருட்களில் உள்ள லேபிள்களில் குறிப்பிடப்படும் விபரங்கள் நுகர்வோரை குழப்புவதாக கடந்த வாரம் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய தெருவோர வியாபாரிகள் நலனைப் பாதுகாக்கும் விதமாக நகர்ப்பகுதியில் அவர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

1 comment:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment