விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் நண்பர் நாராயணன், அவர்தம் கடமையே கண்ணாக செயல்படுபவர். எந்த ஒரு திட்டத்தை அமுல்படுத்த, ஆணையரகத்திலிருந்து உத்தரவு வந்தாலும், அதற்கு முழு ஈடுபாட்டுடன் பாடுபடுபவர் அவர். இப்பக்கூட, பான்பராக், குட்கா தடை உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அவற்றை பறிமுதல் செய்ய, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்குப் பயன்படும் படிவத்தை உடனே தயார் செய்து அனுப்பியுள்ளார்.
அவரது ஆர்வத்தை பாராட்டும் விதமாகவும், அவர் தயாரித்துள்ள படிவம் நம் நண்பர்கள் அனைவருக்கும் பயன்படவேண்டுமென்ற நோக்கத்திலும் இங்கே பகிர்ந்துள்ளேன். பதிவிறக்கிக்கொள்ளுங்கள், பாராட்டுக்களை நண்பர் நாராயணனுக்குத் தெரிவியுங்கள். செல்:9487633669.
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்குப் பயன்படும் படிவங்கள் நண்பர்கள் யார் தயாரித்தாலும், எனது unavuulagam@gmail.com மெயில் ஐ.டிக்கு pdf அல்லது jpg ஃபைலாக அனுப்பி வையுங்கள். இங்கே அவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம்.

4 comments:
திரு. நாராயணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
காலை வணக்கம்,ஆபீசர்!நலமா?///பகிர்வு அனைவருக்கும் பயன்படும்.கடமையே கண்ணாக உடனடி நடவடிக்கை எடுத்த நாராயணனுக்கும்,பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் போன்ற ஆபீசர்களால்,தமிழ் நாடு செழிப்புறட்டும்!
நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் சார்.
நலம் Subramanian Yogarasa சார். நன்றி.
Post a Comment