குடும்பம்:
மரங்களின்
மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை
கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை
பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை
நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு
கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் "
என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி
இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும்
உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில்
காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல:
காட்டு விலங்குகளும் பறவைகளும்
அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6
மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின்
சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை
அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட
தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச்
சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு
வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு
மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து
கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து
இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட
படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான்
கூகுளில் பார்க்கவே முடிந்தது.
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு
பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும்
சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு
தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம்
கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை
கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும்
இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு
காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு
மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை
மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும்
குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது
முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது
செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது
கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.
இவரை
அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை
வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள்
தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
11 comments:
திரு.ஜாதவ் பயேங் மா மனிதர்... அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
எனது வட்டத்தில் பகிர்கிறேன்...
நன்றி சார்.
வெட்டணும் னா நூறு பேரு கிளம்பியிருப்பாங்க,ஹூம்!இப்படியும் ஒருவர்!!!
அன்பின் சங்கரலிங்கம் - பகிர்வினிற்கு நன்றி = இம்மாமனிதர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் - அரசின் கடைக்கண பார்வைக்குத் தர வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மிகச்சரியா சொன்னீங்க Subramaniam Yogarasa அய்யா.
நாம நாலு பேருக்கு பகிர்வோம். மிக்க நன்றி சீனா அய்யா.
எனது வட்டத்தில் பகிர்கிறேன்...
nalla thagaval
இப்படிப்பட்ட சில மாமனிதர்கள் இருப்பதால்தான் உலகில் கொஞ்சமேனும் மழை பெய்கிறது...!
அசத்தல் பதிவு ஆபீசர், யாவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாமனிதர் முலாய்....!
இப்படிப்பட்ட சில மாமனிதர்கள் இருப்பதால்தான் உலகில் கொஞ்சமேனும் மழை பெய்கிறது...!
அசத்தல் பதிவு ஆபீசர், யாவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாமனிதர் முலாய்....!
I salute you!
Post a Comment