இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 7 December, 2012

டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

         சொல்வதற்கு என்று ஒன்று இல்லை, செய்தியே பேசும் இங்கு.






                      விழிப்புடன் இருந்தால வேதனைகள் தவிர்க்கலாம்:







உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
திருநெல்வேலி.

  மாநகரப் பகுதியில், மழைக்காலம் தொடங்கியுள்ளதால், உணவுத்தொழில் புரிபவர்கள் கீழ்க்கண்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

வளாகத்தில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க ஏதுவாக இருக்கும், திறந்த நிலையிலுள்ள கப்புகள், காலி டப்பாக்கள், டயர்கள், கண்ணாடி பாட்டில்கள், சிரட்டைகள் போன்றவற்றை, உடனுக்குடன் வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு, நன்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரையே வழங்க வேண்டும்.
உணவருந்த வருபவர்களுக்கு, சூடான உணவுப்பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும்.
தயாரித்த உணவுப்பொருட்களை, கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
நிறுவன வளாகத்தில், கிருமிநாசினிகள் தெளித்து, சுத்தமாகவும்ää சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
உணவகக் கழிவுப்பொருட்களை, ஈ மொய்க்காதவாறு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
உணவு நிறுவனத்தில், தொற்றுநோய் கண்ட நபர்களை பணியில் அமர்த்தக் கூடாது.
உணவு தயாரிக்க, பரிமாறப் பயன்படுத்தும் பாத்திரங்களை, கொதி நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
உணவு நிறுவனத்தில், எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.


உணவு பாதுகாப்பு அலுவலர்       மாவட்ட நியமன அலுவலர்
   திருநெல்வேலி. திருநெல்வேலி.






                           

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக்கண்டுபிடித்து, அவற்றை அழித்தால், டெங்குவைக் கட்டுப்படுத்துவது மிக சுலபம்.
Follow FOODNELLAI on Twitter