இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday, 25 February, 2010

விலை கொடுத்து வினையை வாங்குகிறோம்!

பஸ்ஸில் பயணம். பாதி வழியில் பசியின் தாக்கம். பதினைந்து நிமிடம் நிற்கூங்க. சாப்பிடறவங்க சாப்பிடலாம். ஓட்டுனர் விளம்பரம் செய்வார். ஓடிப்போய் சாப்பிட உட்காருவோம் மோட்டலில். சூடிருக்கும். சுவை இருக்காது. சுகாதாரம் சுத்தமாய் இருக்காது. விலை கொடுத்து வினையை வாங்குகிறோம். ஓட்டுனர் -நடத்துனற்கு மட்டும் நல்ல கவனிப்பு தனியே. வண்டியில் ஏறும் மட்டும் பழம், சிகரெட், பாக்கு,அடுத்த நேர உணவு  உள்ளிட்ட பார்சல் - பகடைக்காய்களாய்- பலி ஆடுகளாய் நம்மை  கொண்டு நிறுத்தியதற்கு!    நமக்கோ தவிச்ச வாய்க்கு நல்ல தண்ணீரும் கிடைக்காது.
                        காசு கொடுக்கலாம். குவாலிடிய எப்ப கொடுப்பீங்க? 
                        பயணிகளை காக்க முதல் முயற்சி எடுத்த கோட்ட மேலாளருக்கு ஷொட்டு .                       நாமும் கொஞ்சம் கவனமாய் இருப்போம்.


Follow FOODNELLAI on Twitter

No comments: