பஸ்ஸில் பயணம். பாதி வழியில் பசியின் தாக்கம். பதினைந்து நிமிடம் நிற்கூங்க. சாப்பிடறவங்க சாப்பிடலாம். ஓட்டுனர் விளம்பரம் செய்வார். ஓடிப்போய் சாப்பிட உட்காருவோம் மோட்டலில். சூடிருக்கும். சுவை இருக்காது. சுகாதாரம் சுத்தமாய் இருக்காது. விலை கொடுத்து வினையை வாங்குகிறோம். ஓட்டுனர் -நடத்துனற்கு மட்டும் நல்ல கவனிப்பு தனியே. வண்டியில் ஏறும் மட்டும் பழம், சிகரெட், பாக்கு,அடுத்த நேர உணவு உள்ளிட்ட பார்சல் - பகடைக்காய்களாய்- பலி ஆடுகளாய் நம்மை கொண்டு நிறுத்தியதற்கு! நமக்கோ தவிச்ச வாய்க்கு நல்ல தண்ணீரும் கிடைக்காது.
காசு கொடுக்கலாம். குவாலிடிய எப்ப கொடுப்பீங்க?
பயணிகளை காக்க முதல் முயற்சி எடுத்த கோட்ட மேலாளருக்கு ஷொட்டு . நாமும் கொஞ்சம் கவனமாய் இருப்போம்.

No comments:
Post a Comment