களைப்பாய் வருகிறது. கண்களில் படுகிறது டீக்கடை. சூடாய் ஒரு டீ. சுறுசுறுப்பு உடலில். சுரீர் என்றொரு வலி வயிற்றில். அத்தனைக்கும் காரணம் கலப்பட தேயிலைதான். மனிதன் மனசாட்சியே இல்லாமல் செய்யும் கலப்படங்கள் கோடி கோடி.
காலையில் எழுந்ததும் டீ அருந்துபவரா நீங்கள். இதோ டீயில் செய்யப்படும் கலப்படங்கள்:
- ஏற்கனவே பயன்படுத்திய தேயிலை சக்கையில் செயற்கை வண்ணங்கள் ஏற்றி புத்தம் புது டீயாக பவனி வரவான ஒரு வகை.
- ஸ்ட்ராங் டீ கேட்பவர்க்கு இது : ஆட்டு சாணத்திலிருந்து நிறத்தை பிரித்தெடுத்து சக்கை தேயிலையில் நிறம் ஏற்றுவது மற்றொரு வகை.
நினைவிருக்கட்டும் . இவையெல்லாம் புற்று நோய் உருவாக்கும் வயிற்றில்.
வாங்க டீ சாப்பிட போகலாமா?
எப்படி கண்டுபிடிப்பது?
மை உறிஞ்சும் தாளில் சிறிது தேயிலையை வைத்து அதன் மீது சில துளி தண்ணீர் விட்டால், நல்ல தேயிலையின் ரெங் மிக மெதுவாக தாளில் பரவும். கலப்பட தேயிலையின் ரெங் தாறுமாறாய் ஓடும்.இது ஈசியான வழிங்க.
என்ன பேப்பரும் கையுமா கிளம்பிட்டிங்களா?
நாங்கள் மட்டும் பார்த்தல் போதாது நீங்களும் விழிப்புடன் இருங்கள்.

1 comment:
Sir, one more information about Tea. It have rich calcium & oxalate and for the stone patients it is not advisible. By S.Narayanan Food Inspector Sattur Municipality
Post a Comment