இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 6 April, 2011

ஜப்பானிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை.


                                    ஜப்பான் மக்களின்  சுனாமி சோகம் மறைவதற்குள், அடுத்த சோக  செய்தி அவர்களுக்கு, ஜப்பானிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கபடுவது. 

உலக அளவில், ஜப்பான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மொத்தமாக தடை விதிக்கும் முதல் நாடு இந்தியா. ஜப்பான் மக்களின் சுறு சுறுப்பும், கடமை உணர்ச்சியும் சொல்லி மாளாது. வேலை நிறுத்தம் செய்வதென்றால் கூட, உள்ளிருப்பு வேலைநிறுத்தமும், உற்பத்தியை  அதிகமாக பெருக்குவதும் அவர்கள் பாணியாகும். 
                                 கடந்த ஒரு மாத காலமாக, ஜப்பான் அணு உலையிலிருந்து கதிவீச்சு அபாயத்தை கட்டுபடுத்த, ஜப்பான் ,கடும் முயற்ச்சிகள்  எடுத்துவந்தாலும்,  கதிர்வீச்சு கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என்பதே துன்பமான  நிஜம்.
                                    உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விஷயங்களை கவனித்து வரும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், டெல்லியில் நேற்று ஒரு அவசர கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில், ஜப்பானில் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளியாகும் அபாயம் இருப்பதால், ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் உணவு பொருட்களின் தரம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. முடிவில், இந்தியாவிற்கு, ஜப்பானிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. 
                                             கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், கதிவீச்சு  பாதிப்பு,  உணவு பொருட்களில் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் உடனடியாக தெரிய வராது என்பதால், இததகைய ஓர் முடிவு அவசியமானதாகிறது. அடுத்த மூன்று மாதங்கள் அல்லது கதிர்வீச்சு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று நூறு சதவிகிதம் நிரூபணமாகும் காலம் வரை, இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது. 
                                              இயற்கை சீறினால் என்னாகும் என்று தெரியாமலே சாரி தெரிந்தும் தெரியாத மனிதர்கள் போல் துணிந்தே விளையாடுகிறோம். துன்பங்கள் வந்த பின்னர் துவண்டு விடுகிறோம்.
                                              கதிர்வீச்சு அபாயங்கள்  கட்டுக்குள் வர  பிரார்த்திப்போம்! 
Follow FOODNELLAI on Twitter

55 comments:

மொக்கராசா said...

//இயற்கை சீறினால் என்னாகும் என்று தெரியாமலே சாரி தெரிந்தும் தெரியாத மனிதர்கள் போல் துணிந்தே விளையாடுகிறோம். துன்பங்கள் வந்த பின்னர் துவண்டு விடுகிறோம்.

சரியாக சொன்னீர்கள், இயற்கை முன்னால் நாம்,எல்லாரும் சின்ன தூசிகள் தான்......

Chitra said...

That is really a sad news. I hope that everything comes out clear and normal, soon.

டக்கால்டி said...

அணுக்கதிர் வீச்சு இப்போ கடல் நீரிலும் ஊடுருவி விட்டது...ஹ்ம்ம்...இதுவும் கடந்து போகும்...

உணவு உலகம் said...

Thank u Mokkarasa

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்.

சக்தி கல்வி மையம் said...

பதிவை படிச்சுட்டு வரேன்..

உணவு உலகம் said...

Thanks Chitra.

உணவு உலகம் said...

Thanks dakalti sir

உணவு உலகம் said...

Vanga Karun

சக்தி கல்வி மையம் said...

அந்த கூட்டத்தில், ஜப்பானில் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளியாகும் அபாயம் இருப்பதால், ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் உணவு பொருட்களின் தரம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. முடிவில், இந்தியாவிற்கு, ஜப்பானிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. -- நல்ல முடிவா?

சக்தி கல்வி மையம் said...

கதிர்வீச்சு அபாயங்கள் கட்டுக்குள் வர பிரார்த்திப்போம்! -- கன்டிப்பா..

உணவு உலகம் said...

sorry Karun. Unable to reply in tamil. Meet evng

சி.பி.செந்தில்குமார் said...

வேற வழி இல்லை.. இறக்குமதி செஞ்சா பாதிப்பு ஏற்படும்..

உணவு உலகம் said...

Thanks senthil sir

Speed Master said...

சோதனை மேல் சோதனை

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்ன செய்வது? நம்ம நாட்டு நலனையும் பாக்கனுமில்ல!!!

பொன் மாலை பொழுது said...

வேதனையாக இருந்தாலும் நாமும் வேறு என்னதான் செய்வது? வேறு வழி இல்லை.
அவர்களுக்கு தேவையான அணைத்து பொருட்களும் பிற நாடுகள் தந்து அவர்களை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
எனினும் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும் நிலையில் இவைகள் கடினமான காரியமே.

ஆனந்தி.. said...

ஜப்பானியர்கள் பீனிக்ஸ் பறவையை போலே...இதையும் சமாளிச்சுட்டு வந்திருவாங்க...இந்தியா விமானம் மூலம் பல லட்சம் லிட்டர் குடி நீர் வழங்கி இருக்காங்க...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இனி பொருளாதார ரீதியாகவும் அவங்க பாதிக்கப்படப் போறாங்க!! ஸோ சாட் !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கஷ்டமான முடிவுதான், இருந்தாலும் வேறுவழியில்லை!

சென்னை பித்தன் said...

//கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், கதிவீச்சு பாதிப்பு, உணவு பொருட்களில் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் உடனடியாக தெரிய வராது என்பதால், இததகைய ஓர் முடிவு அவசியமானதாகிறது. அடுத்த மூன்று மாதங்கள் அல்லது கதிர்வீச்சு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று நூறு சதவிகிதம் நிரூபணமாகும் காலம் வரை, இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. //
என்ன செய்ய;வேறு வழியில்லை!

MANO நாஞ்சில் மனோ said...

பாவம் அந்த மக்கள் ஆபீசர்...

MANO நாஞ்சில் மனோ said...

ஜப்பான் மக்கள் எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்தான்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல தகவல்
உஷாரா இருக்கனும்..

Anonymous said...

ஜப்பானியர்கள் மன உறுதி கொண்டவர்கள்

Anonymous said...

ம்..இனிமேலும் இயற்கை அவர்களை வதைக்காமல் இருக்கட்டும்

உணவு உலகம் said...

sorry friends. Meet u in the evng

Jana said...

தக்க கரமான செய்தி தான். என்றாலும் மற்றய நாடகள் தங்கள் பாதகாப்பை அதிகரித்து கொள்வது தேவையான ஒன்றுதான். ஜப்பானியர்கள் வெகு விரைவழிலேயே இந்த தாக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள் என்பதில் எனக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

Unknown said...

சரிதான் இந்த நிலைமையில இறக்குமதி செய்ய முடியாதே, ம்ம்ம் என்ன பண்றது, சீக்கிரமே ஜப்பான் மீண்டு வரட்டும்...

உணவு உலகம் said...

Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

அந்த கூட்டத்தில், ஜப்பானில் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளியாகும் அபாயம் இருப்பதால், ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் உணவு பொருட்களின் தரம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. முடிவில், இந்தியாவிற்கு, ஜப்பானிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. -- நல்ல முடிவா?//
வேறு வழியில்லை.

உணவு உலகம் said...

//Blogger சி.பி.செந்தில்குமார் said...
வேற வழி இல்லை.. இறக்குமதி செஞ்சா பாதிப்பு ஏற்படும்..//
இன்னைக்கு நீங்க ரைட்.

உணவு உலகம் said...

//Blogger Speed Master said...
சோதனை மேல் சோதனை//
சோதனைகளை சாதனைகளாக்குவது ஜப்பானியர்கள் திறமை.

உணவு உலகம் said...

//Blogger தமிழ்வாசி - Prakash said...
என்ன செய்வது? நம்ம நாட்டு நலனையும் பாக்கனுமில்ல!!!//
வேறு வழிகளில் அவர்களுக்கு உதவ நாம் தயாரே.

உணவு உலகம் said...

//Blogger கக்கு - மாணிக்கம் said...
வேதனையாக இருந்தாலும் நாமும் வேறு என்னதான் செய்வது? வேறு வழி இல்லை.
அவர்களுக்கு தேவையான அணைத்து பொருட்களும் பிற நாடுகள் தந்து அவர்களை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
எனினும் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும் நிலையில் இவைகள் கடினமான காரியமே.//
சரிதான்.

உணவு உலகம் said...

//Blogger ஆனந்தி.. said...
ஜப்பானியர்கள் பீனிக்ஸ் பறவையை போலே...இதையும் சமாளிச்சுட்டு வந்திருவாங்க...இந்தியா விமானம் மூலம் பல லட்சம் லிட்டர் குடி நீர் வழங்கி இருக்காங்க...//
மேலதிக தகவல் தந்த தங்கைக்கு நன்றி.

உணவு உலகம் said...

//Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இனி பொருளாதார ரீதியாகவும் அவங்க பாதிக்கப்படப் போறாங்க!! ஸோ சாட் !!//
நாம இருக்கோம்ல!

உணவு உலகம் said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
கஷ்டமான முடிவுதான், இருந்தாலும் வேறுவழியில்லை!//
மாற்று வழிகளில் உதவிட வேண்டும்.

உணவு உலகம் said...

//Blogger சென்னை பித்தன் said...
//கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், கதிவீச்சு பாதிப்பு, உணவு பொருட்களில் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் உடனடியாக தெரிய வராது என்பதால், இததகைய ஓர் முடிவு அவசியமானதாகிறது. அடுத்த மூன்று மாதங்கள் அல்லது கதிர்வீச்சு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று நூறு சதவிகிதம் நிரூபணமாகும் காலம் வரை, இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
என்ன செய்ய;வேறு வழியில்லை!//
ஆமாம் அப்படித்தான்.

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
பாவம் அந்த மக்கள் ஆபீசர்...//
ஏன் நீங்க கூட பாவம்தான்,மனோ.

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
ஜப்பான் மக்கள் எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்தான்...//
நிச்சயம் அந்த திறன்தான் அவர்களை உயர்த்தப்போகிறது.

உணவு உலகம் said...

//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல தகவல்
உஷாரா இருக்கனும்..//
நிஜம்தான்.

உணவு உலகம் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
1. ஜப்பானியர்கள் மன உறுதி கொண்டவர்கள்
2.ம்..இனிமேலும் இயற்கை அவர்களை வதைக்காமல் இருக்கட்டும்//

1. சரிதான்.

2. அப்படியே ஆகட்டும்.

உணவு உலகம் said...

//Jana said...
தக்க கரமான செய்தி தான். என்றாலும் மற்றய நாடகள் தங்கள் பாதகாப்பை அதிகரித்து கொள்வது தேவையான ஒன்றுதான். ஜப்பானியர்கள் வெகு விரைவழிலேயே இந்த தாக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள் என்பதில் எனக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.//
எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு.

உணவு உலகம் said...

//Blogger இரவு வானம் said...
சரிதான் இந்த நிலைமையில இறக்குமதி செய்ய முடியாதே, ம்ம்ம் என்ன பண்றது, சீக்கிரமே ஜப்பான் மீண்டு வரட்டும்...//
மீண்டு வரும்.

Kousalya Raj said...

உணவு பொருளில் கலந்திருக்கும் என்று தடை பண்றாங்க...சரிதான்

அங்கே இருந்து மனிதர்கள் இங்கே வந்தால் அதற்கு தடை போடுற ஐடியா ஏதும் இருக்கானு தெரியல, அல்லது அவர்களை செக் பண்ணி உள்நாட்டுக்குள் விடுவார்களா எனவும் தெரியவில்லை :((

சில நிமிட நேரத்துக்குள் வந்து போய்விட்டது இயற்கையின் கோரத்தாண்டவம்...ஆனால் துயரங்கள் இன்னும் எத்தனை காலம் துரத்துமோ தெரியவில்லை...

விரைவில் நல்லவை நடக்க இறைவனை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

Asiya Omar said...

பாவம் ஜப்பானியர்கள்,பட்ட இடத்திலேயே படும் சொல்றது இது தானா?

ம.தி.சுதா said...

/////கடந்த ஒரு மாத காலமாக, ஜப்பான் அணு உலையிலிருந்து கதிவீச்சு அபாயத்தை கட்டுபடுத்த, ஜப்பான் ,கடும் முயற்ச்சிகள் எடுத்துவந்தாலும், கதிர்வீச்சு கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என்பதே துன்பமான நிஜம்.////

ஏதோ நடக்குது... என்ன நடக்குது என்று தான் சரியாப் புரியல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

உணவு உலகம் said...

//Blogger Kousalya said...

உணவு பொருளில் கலந்திருக்கும் என்று தடை பண்றாங்க...சரிதான்
அங்கே இருந்து மனிதர்கள் இங்கே வந்தால் அதற்கு தடை போடுற ஐடியா ஏதும் இருக்கானு தெரியல, அல்லது அவர்களை செக் பண்ணி உள்நாட்டுக்குள் விடுவார்களா எனவும் தெரியவில்லை :((
#டவுட்டு!

உணவு உலகம் said...

//Blogger Kousalya said...
சில நிமிட நேரத்துக்குள் வந்து போய்விட்டது இயற்கையின் கோரத்தாண்டவம்...ஆனால் துயரங்கள் இன்னும் எத்தனை காலம் துரத்துமோ தெரியவில்லை...//
துயர் தீர தோள் கொடுப்போம்.

உணவு உலகம் said...

//Blogger asiya omar said...
பாவம் ஜப்பானியர்கள்,பட்ட இடத்திலேயே படும் சொல்றது இது தானா?//
இப்போ இருக்கிறது மிக இக்கட்டான நிலை.

உணவு உலகம் said...

//Blogger ♔ம.தி.சுதா♔ said...
ஏதோ நடக்குது... என்ன நடக்குது என்று தான் சரியாப் புரியல...//
எல்லாம் விரைவில் சரியாகும்.

Anonymous said...

/இயற்கை சீறினால் என்னாகும் என்று தெரியாமலே சாரி தெரிந்தும் தெரியாத மனிதர்கள் போல் துணிந்தே விளையாடுகிறோம். துன்பங்கள் வந்த பின்னர் துவண்டு விடுகிறோம். //

தேர்தல் நேரத்திற்கு ஏற்ற வரிகள். பகிர்வுக்கு நன்றி!

உணவு உலகம் said...

சிவகுமார் ! said...
/இயற்கை சீறினால் என்னாகும் என்று தெரியாமலே சாரி தெரிந்தும் தெரியாத மனிதர்கள் போல் துணிந்தே விளையாடுகிறோம். துன்பங்கள் வந்த பின்னர் துவண்டு விடுகிறோம்.
தேர்தல் நேரத்திற்கு ஏற்ற வரிகள். பகிர்வுக்கு நன்றி!//
வாங்க சார். இப்படியெல்லாம் என்னை இழுத்து விடுவதில் உஙளுக்கு என்ன இன்பமோ!

நிரூபன் said...

இந்திய அரசாங்கத்தின் முடிவு வரவேற்கத்தகது, கதிர் வீச்சின் விளைவுகளை உடனடியாக அறிய முடியாவிட்டாலும், எதிர் காலத்தில் அவை மனித உடலிற்குப் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இறக்குமதியை நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதே!
உங்களின் இந்தத் தகவலுக்காக நன்றிகள்.

ஜப்பானிய மக்களைப் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியிலும் இந்தப் பூமியதிர்ச்சி ரொம்பவும் பாதித்து விட்டது.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
இந்திய அரசாங்கத்தின் முடிவு வரவேற்கத்தகது, கதிர் வீச்சின் விளைவுகளை உடனடியாக அறிய முடியாவிட்டாலும், எதிர் காலத்தில் அவை மனித உடலிற்குப் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இறக்குமதியை நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதே!
உங்களின் இந்தத் தகவலுக்காக நன்றிகள்.
ஜப்பானிய மக்களைப் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியிலும் இந்தப் பூமியதிர்ச்சி ரொம்பவும் பாதித்து விட்டது.//
காலம் மாறும். நம் கனிவுகள் அவர்களை கரை சேர்க்கும்.